பக்கம் எண் :

பள்ளிபடைப் படலம் 489

     அந்நகரத்துப் பலவிடங்களிலும் முன்பு கொடிகள் இருந்தமையும்
இப்போது இல்லாமையும் கூறப்பட்டன. வானளாவக் கொடிகள்
உயர்ந்திருப்பதும் தடுத்தாற்போலஅசைவதும், சூரியன் செலவைத்
தவிர்த்துச் சோர்வு நீக்கி உண்டு இளைப்பாறிச் செல்ல நகர்க்கு
அழைப்பதாகக் கற்பனை செய்யப்பெற்றது. இது தற்குறிப்பேற்றவணி. கானம் -
கொடிகளின் மிகுதி- ‘காடு’ என்னும் பொருள் இங்கே தொகுதி  எனப்
பொருள்பட்டது, மரங்களில் தொகுதி காடு, ஆதலின் ‘ஏ’ ஈற்றசை.      30

கொடைமுரச  ஒலி அவிந்த நகர் காணல்  

2132.‘ஈட்டு நல் புகழ்க்கு ஈட்டிய யாவையும்,
வேட்ட, வேட்டவர் கொண்மின், விரைந்து’ எனக்,
கோட்டி மாக்களைக் கூவுவ போல்வன,
கேட்டிலன், முரசின் கிளர் ஓதையே.

    ‘ஈட்டிய யாவையும் - தேடித் தொகுத்த எல்லாச் செல்வங்களையும்;
நல்புகழ் ஈட்டுக்கு
- நல்ல புகழைப்பெறுதற்கு;  வேட்ட - தாம்
விரும்பியவற்றை; வேட்டவர் - விரும்பியவர்கள்; விரைந்து கொண்மின்’ -
விரைவாக வந்து வாங்கிக்கொள்ளுங்கள்; என - என்று; கோட்டி மாக்களை-
கூட்டமாக உள்ள மக்களை; கூவுவபோல்வன - கூவி அழைப்பன
போல்வனவாகிய; முரசின் கிளர் ஓதை - கொடை  முரசின் செருக்கிய
ஒலியை; கேட்டிலன்- (பரதன்) கேட்கப் பெற்றிலன்.

     கொடை  முரசு ஒலித்தலை இரவலர்களைக் கூவி அழைத்தல் போலும்
என்றது  தன்மைத்தற்குறிப்பேற்ற அணி.  கோட்டி - அவை,  மக்கள்
கூட்டம்  உள்ள இடம்.  இங்கே மக்கள் திரள்என்பதாயிற்று. “என்னும்
குறளில் ‘கோட்டி’ என்பது  அவை என்னும் பொருள்படல் அறிக. (குறள்
401).                                                         31

பரிசிலர் பரிசில் பெறாதுள்ள நகரின் நிலை காணல்  

2133. கள்ளை, மா, கவர் கண்ணியன் கண்டிலன்-
பிள்ளை மாக் களிறும், பிடி ஈட்டமும்,
வள்ளைமாக்கள், நிதியும், வயிரியர்,
கொள்டிள மாக்களின் கொண்டனர் ஏகவே,

     மா - வண்டுகள்; கள்ளை கவர் கண்ணியன் - தேனை உண்கின்ற
மலர் மாலையைஅணிந்தவனாகிய பரதன்; வள்ளை மாக்கள் - (அரசனை
வாழ்த்திப் பாடும்) மங்கலவள்ளைப் பாடகரும்; வயிரியர் - யாழ் முதலிய
இயங்களாற் பாடுகின்றவர்களும்; பிடி ஈட்டமும்- பெண்யானைத்
திரளையும்; நிதியும் - செல்வத்தையும்; கொள்ளை மாக்களின் -
கொள்ளையடித்துக் கொண்டு போகின்ற