பக்கம் எண் :

490அயோத்தியா காண்டம்

திருடர்களைப் போல; கொண்டனர் ஏக- பரிசிலாகப் பெற்றுக் கொண்டு
செல்ல; கண்டிலன் -.

     பிள்ளை, மா களிறும், பிடியும் என்று பிரித்துக் கன்றும், யானையும்,
பிடியும் எனவும்பொருள் உரைக்கலாம்.  வயிரியர் - பாணர் - வாத்திய
இசைஞர் என்பது பொருள். அளவறியாதுவாரிக்கொண்டு செல்வது திருடர்
இயல்பு. அதனை ஈண்டுப் பரிசிலர்க்கு உவமை ஆக்கினார்.            32

அந்தணர் தானம் பெறாத நிலை கண்டு இரங்குதல்  

2134.காவல் மன்னவன் கான்முளை கண்டிலன் -
ஆவும், மாவும், அழி கவுள் வேழமும்,
மேவு காதல் நிதியின் வெறுக்கையும்,
பூவின் வானவர் கொண்டனர் போகவே.

     காவல் மன்னவன் - (உலகத்தைக் ) காத்தலைச் செய்கிற தயரத
மன்னவனது; கான்முளை
- வழித் தோன்றலாகிய பரதன்; பூவின்
வானவர்
- மண்ணுலகத் தேவர்கள்ஆகிய பூசுரர் எனப் பெறும் வேதியர்;
ஆவும் - பசுக்களும்; மாவும் - குதிரைகளும்;கவுள் அழிப் வேழமும் -
கன்னத்தில் மதம் பெருகுகின்ற யானையும்; காதல் மேவு -ஆசை
பெருகுகின்ற;  நிதியின் வெறுக்கையும் - செல்வத்தின் மிகுதியும்;
கொண்டனர்போக - தானமாகப் பெற்றுக்கொண்டு செல்ல; கண்டிலன் -.

     கான்முளை - மகனைக் குறிக்கும் சொல்; தந்தையின் காலில்
முளைத்தவன் என்பது பொருள்ஆதலின் வழித்தோன்றல் என உரை
கூறப்பட்டது. அழிதல் - பெருகுதல் என்னும் பொருட்டு  “அழியும்புனல்
அஞ்சன மா நதியே” என்னும் சிந்தாமணியில் அப்பொருளாதல் (சீவக. 1193)
காண்க. ‘ஏ’ஈற்றசை.                                           33

இசையில்லாத அயோத்தி நகரம்  

2135.சூழ் அமைந்த சுரும்பும், நரம்பும், தம்
ஏழ் அமைந்த இசை இசையாமையால்,
மாழை உண் கண் மயில் எனும் சாயலார்
கூழை போன்ற, பொருநர் குழாங்களே.

    பொருநர் குழாங்கள் - பாடி ஆடுகின்ற பொருநர் கூட்டங்களில்
உள்ள; சூழ் அமைந்த கரும்பும்
- (மணம்உள்ளவிடத்தே) சுற்றுதல்
பொருந்திய வண்டுகளும்; நரம்பும்
- நரம்பினால் இசைக்கும்யாழ் முதலிய
கருவிகளும்; ஏழ் அமைந்த - ஏழாகப் பொருந்திய; தம் இசை
இசையாமையால்
- தமக்குரிய இசையை ஒலிக்காமல் வெறுமனே
கிடக்கிறபடியால்; மாழைஉண்கண் மயில் எனும் சாயலார் - இளமைத்