பக்கம் எண் :

498அயோத்தியா காண்டம்

மனம் கெட்டு; அரற்றினன் - பல படியாகப் பிதற்றலானான்;  அரற்றி -
புலம்பி; பின்னரும் - பிறகு; இன்னன மொழிந்தனன் - இவ்வாறு
பேசலானான்.

     முருகன் - அழகன். முருகு என்னும் சொற்கு அழகு, மணம், இளமை,
கடவுள் தன்மை என்னும்நான்கு பொருள் உண்டு.  முருகன் மணம் கமழ்
தெய்வத்து  இள நலம்“ (திருமுருகு 290) உடையன்ஆதலின் பரதனுக்கு
உவமையாயினன்,  ‘இன்னன்’ என்பதனைப் பின்வரும் ஒன்பது செய்யுள்கள்
விரிக்கும் .                                                   47

பரதன் தயரதனை நினைத்து முன்னிலைப்படுத்தி அரற்றுதல்  

2149.‘அறம்தனை வேர் அறுத்து, அருளைக் கொன்றனை,
சிறந்த நின் தண்ணளித் திருவைத் தேசு அழித்து,
இறத்னை ஆம் எனின், இறைவ! நீதியை
மறந்தனை; உனக்கு, இதின் மாசு மேல் உண்டோ?

     ‘இறைவ! - தயரத மன்னனே!; அறம்தனை வேர் அறுத்து -
தருமத்தை வேரோடேஅழித்து; அருளைக் கொன்றனை - அருளை உயிர்
போக்கி; சிறந்த நின் தண் அளித்திருவைத் தேசு அழித்து - உயர்ந்து
சிறந்த நின் குளிர்ந்த கருணைச் செல்வத்தை ஒளிகெடுத்து; இறந்தனை
ஆம் எனின்
- இறந்து  பட்டாய் என்றால்; நீதியை மறந்தனை- நீதியை
மறந்துவிட்டாய் ஆனாய்; உனக்கு -; இதின் - இதனைக் காட்டிலும்; மாசு-
குற்றம்; மேல் உண்டோ - மேம்பட்ட துண்டோ?’

     தயரதன் இறந்தபடியால் உலகில் அறம்காப்பார் இல்லாமையால் அறம்
கெட்டது. தயரதன்இறப்பே அறம், அருள், ஒளி இவற்றை உலகில்
நில்லாதபடி செய்துவிட்டது என்பது இதனாற்கூறியது. எனவே, தயரதன்
ஆட்சிச் சிறப்புப் புலப்படுகிறது. “திருவுடை மன்னரைக் காணில்திருமாலைக் கண்டேனே” (திவ்வியப்-3271) என்பராதலின் அரசனை ‘இறைவ!’ என்றான்.
வள்ளுவரும் ‘இறைமாட்சி’ என்றது காண்க. தயரதன் இறவாதிருந்து
இவற்றையெல்லாம் பழித்தாற்போலப் புகழையே கூறினானாம்.         48

2150.‘சினக் குறும்பு எறிந்து, எழு காமத் தீ அவித்து,
இனக் குறும்பு யாவையும் எற்றி, யாவர்க்கும்
மனக்கு உறு நெறி செலும் வள்ளியோய்! மறந்து
உனக்கு உறு நெறி செலல் ஒழுக்கின்பாலதோ?

    ‘சினக்குறும்பு எறிந்து- வெகுளியாகிய பகையை வெட்டி அழித்து;
எழு காமத் தீ அவித்து
- மனத்தில்தோன்றகின்ற காமம் ஆகிய
நெருப்பை அணைத்து; இனக் குறும்பு யாவையும் எற்றி -கூட்டமாக