பரதன் துன்பத்தில் ஆழ்தல் 2161. | ‘வனத்தினன்’ என்று, அவள் இசைந்த மாற்றத்தை நினைத்தனன்; இருந்தனன், நெருப்புண்டான் என; ‘வினைத் திறம் யாது இனி விளைப்பது? இன்னமும் எனைத்து உள கேட்பன துன்பம், யான்?’ என்றான். |
‘வனத்தினன்’ - (இராமன்) காட்டில் உள்ளான்; என்று -; அவள் இசைத்தமாற்றத்தை - கைகேயி சொன்ன சொல்லை; நினைத்தனன் - (மனத்தில்) எண்ணிஎண்ணிப் பார்த்து; நெருப்பு உண்டான் என - நெருப்பை விழுங்கியவனைப் போல; இருந்தனன் - (செயலற்று, மயக்குற்று) இருந்து; (தனக்குத் தானே) ‘வினைத்திறம் -என் தீவினையின் கூறுபாடு; இனி விளைப்பது யாது - இனிமேலும் எனக்கு உண்டாக்க இருப்பது எத்தகைய தீமையோ?; இன்னமும் - மேலும்; யான் கேட்பன துன்பம் - யான் கேட்கவேண்டுவனவாகிய துன்பங்கள்; எனைத்து உள - எத்துணை உள்ளனவோ;’ என்றான் -. மிகக் கொடிய செய்திகள் (தந்தை இறந்தமை, இராமன் காடு சென்றமை) இரண்டை முதற்கண்கேட்டதனால் உண்டாகிய அதிர்ச்சியும், துயரமும் பரதனைத் தாக்கின, அதனால், அவன் பயந்து இதனினும் கொடிய துன்பங்கள் எவை கேட்க நேருமோ என்று கூறினான். கேட்ட செய்தியினும் கொடியன வேறில்லையாயினும் ஒவ்வொன்றாக அறிதலின் பரதனின் அச்சம் மிகுவதாயிற்று. ‘இசைத்த’என்றது இனிமைபடச் சொன்னாள் என்றாகும். 60 இராமன் வனம் போய காரணத்தைப் பரதன் வினாவுதல் 2162. | ஏங்கினன் விம்மலோடு இருந்த ஏந்தல், ‘அப் பூங் கழல் காலவன் வனத்துப் போயது, தீங்க இழைத்த - அதனினோ? தெய்வம் சீறியோ? ஓங்கிய விதியினோ? யாதினோ?’ எனா. |
விம்மலோடு - அமுகையோடு; ஏங்கினன் - ஏக்கம் கொண்டு; இருந்தஏந்தல் - இருந்த பரதன் (கைகேயியை நோக்கி); ‘அப்பூங்கழல் காலவன் - அந்தப்பொலிவமைந்த வீரக்கழலை அணிந்த கால்களை உடையவனாகிய இராமன்; வனத்துப் போயது -காட்டிற்குச் சென்றது; தீங்கு இழைத்த அதனினோ? - பிறர்க்குத் தீமை செய்தஅதனாலா?; தெய்வம் சீறியோ! - தெய்வங்கள் கோபித்ததனாலேயா?; ஓங்கிய விதியினோ - (இவை எல்லாவற்றினும்) மேம்பட்டதாகிய விதியின் விளைவாலேயா?; யாதினோ - வேறு எந்தக் காரணத்தினாலோ?; எனா - என்று கேட்டு..... (அடுத்த பாட்டில்முடியும்) இராமனது திருமேனி நலங்களுள் வனம் போயது திருவடி ஆதலின், அதன் சிறப்பைப் ‘பூங்கழற்காலவன்’ என்று பரதன் எண்ணியது அவன் மனநிலையைப் |