பக்கம் எண் :

506அயோத்தியா காண்டம்

புலப்படுத்தி அழகு செய்கிறது. எல்லாம் விதியின் விளைவாகவும் தனக்குத்
தெரிந்தசிலவற்றை எடுத்துச் சொல்லி வினாவி,  சொல்லாதவற்றை விதியில்
அடக்கினான் எனக் கொள்க.செருக்கினால் தன்னளவறியாது  கொடுமை
செய்யத் தூண்டுவது ‘விதி’ என்றார் எனலும் ஆம்.தீத்தொழில் செய்யும்
அரசகுமாரரைக் காட்டிற்கு ஓட்டுதல் சூரிய குல வழக்கம். அசமஞ்சன் என்ற
அரசகுமாரன் தீய செய்தமையாற் காட்டிற்கு விரட்டப்பட்டான். அது
கருதியே! ‘தீங்கு இழைத்தஅதனினோ’ என்றான் பரதன்.              61

2163. ‘தீயன இராமனே செய்யுமேல், அவை
தாய் செயல் அல்லவோ, தலத்துளோர்க்கு எலாம்?
போயது தாதை விண் புக்க பின்னரோ?
ஆயதன் முன்னரோ? அருளுவீர்’ என்றான்.

     ‘இராமனே - இராமபிரானே; தீயன செய்யுமேல் - தீய செயல்களைச்
செய்வானாயின்; அவை - அச் செயல்கள்; தலத்து  உளோர்க்கு
எல்லாம்
-இப்பூமியின்கண் உள்ள எல்லார்க்கும்; தாய் செயல்
அல்லவோ - தாய் (தன்குழந்தையின் உடல்நலம் பேணும்பொருட்டுச்
செய்யும்) செயல் போன்றது அல்லவா? (இனி); போயது - (இராமன் வனம்)
சென்றது; தாதை விண் புக்க பின்னரோ? - தந்தையாகியதயரதன்
விண்ணுலகு சென்ற பிறகா (இறந்த பிறகா);  ஆயதன் முன்னரோ? -
அவன் விண்ணுலகுசேறற்கு முன்னமேயா (உயிருடன் இருக்கும் போதேயா);
அருளுவீர் - சொல்லி அருளுக;’ என்றான் -.

     இராமன் தீமை செய்ததனால் வனம் போயிருக்க மாட்டான். இராமன்
செய்கிற தீமைகள்தாய்செய்யும் தீமைகள் போலப் பார்வைக்குத் தீமைபோல்
தோன்றி உண்மையில் நலம்செய்வதாகும்.  தாய் தன் குழந்தையைக் காலில்
இட்டு நெருக்கிக்,  கைகளைப் பிடித்து, வாயைநெருக்கி,  அழ அழப் பால்
ஊட்டுவாள். காண்பார்க்குக் கொடுமை போல் தோன்றும்; உண்மையில்
பாலை உண்பித்தலாகிய நற்செயல் அது ஆகும்.  அதுபோன்றதே இராமன்
செயலும்; ஆதலின் ‘தீங்குஇழைத்த அதனினோ’ என்று இராமன் திறத்து
நினைத்தலும் தகாது என்றானாம். அருளுவீர்’ என்றது இகழ்ச்சிக் குறிப்பு.
இரு கொடுமைகளைக் கவல்வின்றி இசைத்தது அறிந்தான் ஆதலின்இவ்வாறு
கூறினான்.                                                    62

கைகேயியின் மறுமொழி  

2164. ‘குருக்களை இகழ்தலின் அன்று; கூறிய
செருக்கினால் அன்று; ஒரு தெய்வத்தாலும் அன்று;
அருக்கனே அனைய அவ் அரசர் கோமகன்
இருக்கவே, வனத்து அவன் ஏகினான்’ என்றான்.

     ‘(இராமன் காடு போயது) ‘குருக்களை - பெரியோரை; இகழ்தலின்
அன்று
-பழித்ததனால் அன்று; கூறிய - முன்பு நீ கூறிய; செருக்கினால்-
அளவின்மிக்க கர்வச் செயலாலும் அன்று; ஒரு