முன்பு பரதன் வினாவில் வந்த மூன்று காரணங்களையும் அன்று என
மறுத்தாள் கைகேயி. ‘குருக்களை இகழ்தல்’ -‘தீங்கு இழைத்த அதனினோ’
என்பதுடுனும், ‘ஒருதெய்வத்தால்’ என்பது ‘தெய்வம் சீறியோ’ என்பதுடனும்,
‘செருக்கினால்’ என்பது ‘ஓங்கியவிதியினோ’ என்பதுடனும் பொருந்துமாறு
அறிக.
வாய்மை தவறாதவன் தயரதன்; தன் உயிர் போய்விடும் என்பது
தெரிந்தும் கைகேயிக்குவாக்குத் தவறாமல் வரம் கொடுத்தவன் ஆதலால்,
‘அருக்கனே அனைய’ என்று தயரதனை இங்குக்கூறினாள். பரதன் கேட்ட
வினாக்களின் அளவே கைகேயி பதில் உரைக்கிறாள்; மேற்கொண்டுதானாக
எதுவும் சொல்லாதில்லை; ஏன்? பரதன்பால் தான் செய்த செயலை உடன்
தெரிவிப்பதில்எழுந்த அச்சமே ஆகும். 63
பரதன் மறுபடியும் கைகேயியை வினாவுதல்
2165. | ‘குற்றம் ஒன்று இல்லையேல், கொதித்து வேறு உளோர் செற்றதும் இல்லையேல், தெய்வத்தால் அன்றேல் பெற்றவன் இருக்கவே, பிள்ளை கான்புக உற்றது என்? தெரிதர உரைசெய்வீர்.’ என்றான். |
‘குற்றம் ஒன்று இல்லையேல் - இராமன் பிறருக்குச் செய்த தீங்கு
ஒன்றும்இல்லையாக இருக்குமானால்; வேறு உளோர் கொதித்து
செற்றதும் இல்லையேல்
- இராமனுக்குவேறாக உள்ள பகைவர் மனம்