கைகேயியின் கடுஞ்சொல் கேட்கப் பிடிக்காமல் பரதன் செவிகளைப் பொத்தினன். புருவம்வளைதல் மேலும் கீழுமாதல், மூச்சுக்காற்று வெப்பமாய் வெளிப்படுதல், கண் கோவைப்பழம் போல்சிவத்தல் (உதிரம் கான்றல்) இவை சினத்தின் மெய்ப்பாடுகளாம். ‘ஏ’ ஈற்றசை. 65 2168. | துடித்தன கபோலங்கள்; சுற்றும் தீச் சுடர் பொடித்தன மயிர்த் தொளை; புகையும் போர்த்தது; மடித்தது வாய்; நெடு மழைக் கை, மண் பக அடித்தன, ஒன்றொடு ஒன்ற அசனி அஞ்சவே. |
சுபோலங்கள் - கன்னங்கள்; துடித்தன - துடித்துக்கொண்டிருந்தன; மயிர்த் தொளை - மயிர்க்கால் கண்களில்; சுற்றும் - எப்பக்கமும்; தீச்சுடர் - நெருப்புப் பொறிகள்; பொடித்தன - அரும்பின; புகையும் போர்த்தது - புகை கிளம்பி (நாற்புறமும்) மூடிற்று; வாய் மடித்தது - வாய் மடித்துக்கொண்டது; மழை நெடுங்கை - மழை போன்ற வள்ளன்மையுடைய நீண்ட கைகள்; அசனி அஞ்ச - இடியும் அஞ்சும்படி (பெரிய ஒலி உண்டாகும்படி); மண்பக ஒன்றொடு ஒன்றுஅடித்தன - பூமி வெடிக்கும்படி ஒரு கையோடு ஒரு கை மோதி அடித்தன. கன்னம் துடித்தல், மயிர்க்கால் மூலம் வெப்பம் பரவல், வாய் மடித்தல், கையை அடித்தல் சினத்தின் அறிகுறிகளாம். ‘ஏ’ ஈற்றசை. 67 2169. | பாதங்கள் பெயர்தொறும், பாரும் மேருவும், போதம் கொள் நெடுந் தனிப் பொரு இல் கூம்பொடு, மாதங்கம் வரு கலம் மறுகி, கால் பொர, ஓதம் கொள் கடலினின்று உலைவ போன்றவே. |
பாதங்கள் - (சினங்கொண்ட பரதனது) கால்கள்; பெயர்தொறும் - தரையில் மாறிமாறி வைக்கப்படுந்தோறும்; பாரும் மேருவும் - மண்ணும் மேரு மலையும்; மாதங்கம் வரு கலம் -யானையை ஏற்றிவருகிற மரக்கலம்; கால் பொர - (கழற்)காற்று மோத; போதம் கொள் - கலத்தைச் செலுத்தும் அறிவைத் தன்பாற் கொண்ட; தனி நெடும் பொரு இல் கூம்பொடு - தனித்த நீண்ட ஒப்பற்ற பாய்மரத்துடனே; மறுகி- சுழன்று; ஓதம் கொள் கடலினின்று - நீர்ப்பெருக்கைக் கொண்ட கடலிலிருந்து; உலைவ போன்ற - தடுமாறி வருந்துவ போன்ற. யானை யேற்றிய கலம் பாய்மரத்தோடு காற்றால் கடலில் நிலைதடுமாறல், மேருமலையோடும கூடியபூமி பரதன் பாதம் பெயர நிலைதடுமாறலுக்கு உவமை ஆயிற்று. யானை - மேரு, மரக்கலம் - பூமி, பரதன் பாதம் - பாய்மரம் என ஒப்புரைக்க. கப்பலைத் திசையறிந்து காற்றின் போக்கறிந்து செலுத்துவது பாய்மரம் ஆதலின் “போதங் கொள் கூம்பு” என்றார். 68 |