பக்கம் எண் :

512அயோத்தியா காண்டம்

ஆகும்; ஆகவே, எந்த இராமனைக் காட்டிற்கு அனுப்பினாயோ அவனால்
தான் இன்று நீஉயிரோடிருக்கின்றாய் என்றான் பரதன். ‘தாய் எனும் பெயர்’
என்றது தாய் என்பது உனக்குப்பெயரளவில்தான் பொருந்தும்;  பொருள்
அளவில் அச்சொல்லுக்கு நீ சிறிதும் தகுதியற்றவள்.சொற்கள் பொருள்
உணர்த்தும் வழிதான் ஆற்றல் உடையன; பொருள் உணர்த்தாத வழி
ஆற்றல்அற்றன.  எனவே,  உனக்குரிய ‘தாய்’ என்பதும் எனைத் தடுக்கும்
ஆற்றல் உடையதன்று என்பதும் ஒருகருத்து. ‘ஓ’ வினாப்பொருட்டு.     72

2174.‘மாளவும் உளன், ஒரு மன்னன் வன் சொலால்;
மீளவும் உளன் ஒரு வீரன்; மேய பார்
ஆளவும் உளன் ஒரு பரதன்; ஆயினால்,
கோள் இல அறநெறி! குறை உண்டாகுமோ?

     ‘ஒரு மன்னன் - ஓர் அரசன் (தயரதன்); வன் சொலால் -
(கைகேயியின்வரம் என்ற) கொடுஞ்சொல்லால்; மாளவும் உளன் - தன்
உயிரை விடவும் இருக்கிறான்; ஒரு வீரன் - ஓர் ஆண்மகன் (இராமன்);
மீளவும் உளன் - தான் ஆள வேண்டிய அரசைவிட்டுக் காடு) செல்லவும்
இருக்கிறான்; மேய பார் - (இவ்வாறு வந்து சேர்ந்த)பூமியை; ஆளவும் -
ஆட்சிபுரியவும்; ஒரு பரதன்- பரதன் என்ற ஒருவன்; உளன்- இருக்கிறான்;
ஆயினால் - இவ்வாறானால்;  அறநெறி கோள் இல - தரும வழிகுற்றம்
உடையதன்று; சிறந்ததே; குறை உண்டாகுமோ - ஒரு குறையும்
உடையதாகுமா?’

     இகழ்ச்சிக் குறிப்பாளகக் கொள்க.  நடந்தவற்றைக் கூறி நன்று! நன்று!
என்று தன்னைத்தானே நகையாடிக்கொண்டான் பரதன். “கைகேயி! தாயே!
அம்மா உன் ஏற்பாடு அறநெறிக்குக் கோளேஇல்லாத ஏற்பாடு; இனி
அறநெறிக்குக் குறை உண்டாகுமோ” என்று கேட்டாளாம்.              73

2175.‘ “சுழியுடைத் தாயுடைக் கொடிய சூழ்ச்சியால்,
வழியுடைத்தாய் வரும் மரபை மாய்த்து, ஒரு
பழி உடைத்து ஆக்கினன், பரதன் பண்டு” எனும்,
மொழி உடைத்து ஆக்கலின் முறைமை வேறு உண்டோ?

    ‘சுழிஉடை- வஞ்சனை உள்ள; தாயுடை- தாயாகிய கைகேயினுடைய;
கொடிய சூழ்ச்சியால் -தீய புணர்ப்பினால்;  வழியுடைத்தாய் வரும்
மரபை மாய்த்து
- தொன்றுதொட்டு வரும்சூரிய குலப்பரம்பரை வழக்கை
மாறுபடுத்தி;  பரதன் -; ஒரு பழி உடைத்து - ஒருபழியை உடையதாக;
பண்டு - முன்பு; ஆக்கினன்’ - செய்திட்டான்; எனும்மொழி - என்கின்ற
பேச்சை; உடைத்து ஆக்கலின் - (பிற்காலத்தில்)பேசும்படியாகச்
செய்திடுவதைக் காட்டிலும்; வேறு முறைமை - வேறு ஒழுங்கு (ஏதேனும்);
உண்டோ - (நீ செய்த செயலில்) இருக்கிறதா?’