‘அரோ’ ஈற்றசை. ‘மீண்டு’ என்பதை மாறிச் சேர்க்காது. நேரே சேர்த்துத் திரும்பவும்மண்கிழிதர வீழ்ந்தான் என்றும் பொருள் கூறலாம். இப்பொருளில் வரும்போது பரதன் வந்தவுடன்வீழ்ந்து வணங்கினான், திரும்பவும் கோசலை திருவடியில் வீழ்ந்தான் என்று உரைத்தல்வேண்டும். அருகர் - ஈற்றுப் போலி. 89 பரதனின் இரங்கல் உரை 2191. | ‘எந்தை எவ் உலகு உளான்? எம் முன் யாண்டையான்? வந்தது, தமியென், இம் மயக்கம் காணவோ? சிந்தையின் உறு துயர் தீர்த்திரால் எனும், அந்தரத்து அமரரும் அழுது சோரவே. |
அந்தரத்து அமரரும் - வானுலகில் உள்ள தேவர்களும்; அமுது சோரவே -(இவன் புலம்பைக் கேட்டும் இவனைக் கண்டும் தம்மாலும் ஆற்றமுடியாமல் தாமும்) அழுது சோரும்படி;‘எந்தை எவ் உலகு உளான்? - என் தந்தையாகிய தயரதன் இப்போது எந்தஉலகத்தில் இருக்கிறான்?; எம்முன் யாண்டையான் - என் தமையனாகிய இராமன் எவ்விடத்தில் இருக்கிறான்?; தமியென் - ஆதரவற்ற தனியனாகிய யான்; வந்தது -அயோத்திக்கு வந்தது; இம் மறுக்கம் காணவோ? - இந்தத் துன்ப நிலையைக்காண்பதற்காகவோ?; சிந்தையின் - (என்) மனத்தில்; உறு துயர் - பொருந்தியதுன்பத்தைத்; தீர்த்திர்- போக்குங்கள்;’ எனும்- என்பான். இறந்தபின் வேறு உலகம் செல்வர் ஆதலான் ‘எந்தை எவ் உலகு உளான்’ என்றான். இராமன்காடு சென்றபடியால் ‘யாண்டையான்’ அதாவது காட்டில் எவ்விடத்தில் உள்ளான் என்றான்.தந்தையோடும் தமையனோடும் இருக்கின்ற பேறு பெறாமையால் தன்னைத் ‘தமியென்’ என்றுகுறிப்பிட்டான். ‘ஆல்’, ‘ஏ’ அசைகள். 90 2192. | ‘அடித்தலம் கண்டிலென் யான், என் ஐயனை; படித்தலம் காவலன், பெயரற்பாலனோ? பிடித்திலிர் போலும் நீர்; பிழைத்திரால்’ எனும் - பொடித் தலம் தோற் உறப் புரண்டு சோர்கின்றாள். |
தலம் பொடி தோள் உறப் புரண்டு சோர்கின்றான் - மண்ணில் உள்ள புழுதிதன்தோளிற் படும்படி நிலத்திற் புரண்டு மனம் சோர்ந்தவனாகி; ‘யான் -; என் ஐயனை- என் தலைவனாகிய இராமனது; அடித்தலம் - திருவடியை; கண்டிலென் - காணப்பெறவில்லை;படித்தலம் காவலன் - இப்பூமியாகிய இடத்துக்கு அரசனாகிய இராமன்; பெயரற்பாலனோ?- இக்கோசல நாட்டைவிட்டுப் பெயர்ந்து செல்லும் தன்மை உடையனோ; நீர்- (அன்னையாகிய) நீர் (ஆற்றாமையால்); பிடித்திலிர் போலும் - (அவன் கானகம்செல்லும்போது) |