பக்கம் எண் :

524அயோத்தியா காண்டம்

தடுத்தல் செய்து  பிடித்து  வைத்துக் கொள்கிலிர்;  பிழைத்திர் - பிழை
செய்துவிட்டீர்;’ எனும் - என்று  சொல்வானாயினன்.

     இராமனே அரசன் என்பதைக் கோசலைக்கு உறுதிப்படுத்தம் முகமாக,
‘படித்தலம் காவலன்’ என்றுஇராமனைக் குறிப்பிட்டான். ‘பிழைத்திர்’
என்பதற்கு ‘உம்மால் இனி உயிர் வாழ இயலுமோ’என்று கோசலையைக்
கேட்டதாகவும் கொள்ளலாம். ‘ஆல்’ அசை.                         91

2193.‘கொடியவர் யாவரும் குலங்கள் வேர்அற
நொடிகுவென் யான்; அது நுவல்வது எங்ஙனம்?
கடியவள் வயிற்றினில் பிறந்த கள்வனேன்,
முடிகுவென், அருந் துயர் முடிய’ என்னுமால்,

     ‘யான்-; கொடியவர் யாவரும் - (இராமனைக் காடு செல்லச் செய்த)
கொடியவர்கள்எல்லோரும்; குலங்கள் வேர் அற - தம் குலங்களோடு
வேர் அற்றுப் போகும்படி; நொடிகுவென் - அழித்து  விடுவேன்; அது
நுவல்வது எங்ஙனம்?
- அதுபற்றிச் சொல்வது என்னபயன் உடையது;
(செயலின்தான் அறிய வேண்டும்); கடியவள் வயிற்றினில் பிறந்த
கள்வனேன்
- (எல்லோரையும் அழித்துவிட்டு இறுதியில்) கொடிய கைகேயி
வயிற்றில் பிறந்தவஞ்சகனாகிய யானும்; அருந்துயர் முடிய முடிகுவென்’-
என்னுடைய பொறுத்தற்கரிய துன்பம்இல்லையாம்படி இறந்துபடுவேன்;’
என்னும் - என்று சொல்வான்.

     மிகுதியான துன்பத்தால் பேசுகிறான் ஆதலின், ‘கொடியவர்களையும்
அழித்து, நானும்இறந்துபடிவேன்’ என்றான். ‘ஆல்’  ஈற்றசை.          92

2194. ‘இரதம் ஒன்று ஊர்ந்து, பார் இருளை நீக்கும் அவ்
வரதனில் ஒளி பெற மலர்ந்த தொல் குலம்,
“பரதன்” என்று ஒரு பழி படைத்தது’ என்னுமால் -
மரதக மலை என வளர்ந்த தோளினான்.

    மரகத மலை என வளர்ந்த தோளினான்- மரகத மலை போல
வளர்ந்த பச்சை வண்ணமான தோளை உடைய பரதன்; ‘பார் இருளை
இரதம்ஒன்று ஊர்ந்து நீக்கும் அவ்வரதனில்
- இந்த மண்ணில் உள்ள
இருட்டை ஒரு தேரினை ஊர்ந்து சென்று அடியோடு போக்கும் அந்த
மேன்மையுடைய சூரியனால்; ஒளிபெற மலர்ந்த தொல்குலம் -
ஒளிபெற்றுப் பாரம்பரியமாக மலர்ந்து சிறந்த இப்பழமையான அரசகுலம்;
‘பரதன்’ என்று ஒருபழி படைத்தது; - இப்போது  பரதன் என்ற
பெயரை உடைய ஒரு பழியையும் உண்டாக்கியது;’ என்னும் - என்று
சொல்வான்.