பக்கம் எண் :

பள்ளிபடைப் படலம் 533

     ‘உயிர் வளர்த்து  உண்ணும் ஆசையால்’ என்பதனை இடைநிலைத்
தீவகமாகக் கொண்டு, ‘எஃகு எறி செருமுகத்து’ என்பதன் முன்னும் கூட்டிப்
பொருள் செய்யலாம். -இது இடைநிலை விளக்கணி என்றும்,  தாப்பிசைப்
பொருள்கோள் என்றும் கூறப்பெறும்.‘கொள்பொருள் வெஃகிக் குடி
அலைக்கும் வேந்தன்” (திரிகடுகம் 50) எனக் கூறுவர் இம்மன்னனை.    107

2209.‘அழிவு அரும் அரசியல் எய்தி, ஆகும் என்று,
இழி வரு சிறு தொழில் இயற்றி, ஆண்டு, தன்
வழி வரு தருமத்தை மறந்து, மற்று ஒரு
பழி வரு நெறி படர் பதகன் ஆக, யான்.

    ‘அழிவு அரும் அரசியல் எய்தி- கெடுதல் இல்லாத அரசாட்சியை
அடைந்து’ ஆகும் என்று
- (எனக்கு) எதுவும் செய்ய இயலும்என்று கருதி;
ஆண்டு - அரசாட்சி நடத்தி; தன் வழிவரு தருமத்தை மறந்து -
தன்னுடைய பாரம்பரியமான குலதருமத்தை மறந்து (கை விட்டு); மற்று -
வேறாகிய;  ஒருபழிவரு நெறி - தனக்குப் பழி வந்து சேரக் கூடிய
வழியில்; படர் - விரித்துசெல்கின்ற;  பதகன் - பாவியாக;  யான் ஆக -
யான் ஆவேனாக.’

     அரசேற்றவன் அறவழியில் நடக்க வேண்டும்; வேறு வழியில் சென்றால்
பாவியாகிறான்; அவனைப்போல நானும் ஆவேனாக என்று பரதன் சூளுரை
செய்தான்.                                                   108

2210.‘தஞ்சு என ஒதுங்கினர் தனது பார் உளோர்
எஞ்சல் இல் மறுக்கினோடு இரியல் போயுற,
வஞ்சி சென்று இறுத்தவன் வாகை மீக் கொள
அஞ்சின மன்னவன் ஆக யானுமே.

     யான் -; தஞ்சு என ஒதுங்கினர் தனது பார் உளோர் - (நீயே
எமது) அடைக்கலம்எம்மைப் பாதுகாக்க என்ற தன்னிடத்தில் வந்து
அடைந்த தன் குடிமக்கள்; எஞ்சல் இல்மறுக்கினோடு- குறைதல் இல்லாத
(அதிக) மனக் கலக்கத்தோடு;  இரியல் போய் உற- கெட்டு ஓடும்படியாக;
வஞ்சி சென்று இறுத்தவன் - வஞ்சி மாலை புனைந்து மண்ணாசை
காரணமாகப்படை எடுத்துத் (தன் எல்லையில்) தங்கிய பகை அரசன்;
வாகை மீக் கொள - வெற்றிமேற்கொண்டு ஆரவாரம் செய்ய; அஞ்சின
மன்னவன்
- அப்பகைவனோடு தன் உயிர் உள்ளதுணையும் தன்
மக்களைக் காப்பாற்றப் போர் செய்யாமல் பயந்த அரசன்; ஆக -
(செல்லுகின்ற தீய கதியில்) செல்வேனாக.

     வஞ்சி - மண்ணாசை காரணமாகப் படை எடுத்துச் சென்று பகைவர்
நாட்டு எல்லையில் தங்கிச் செய்யும் போர்ப் பகுதி. வஞ்சி என்பது
மேற்சேறல் எனப்பெறும்.அதற்கு வஞ்சிப்பூச் சூடுதல் உரித்து. வாகை -
வெற்றி; வெற்றி