பக்கம் எண் :

534அயோத்தியா காண்டம்

பெற்றோர் வாகைப்பூச் சூடுவர் - ‘வாகைப்பூவை மேல்சூடிக்கொள்ள’ எனலும்
ஆம். யானும், ‘உம்’ எச்சவும்மை. சிறப்பும்மை ஆகலும் ஆம்.         109

2211.‘கன்னியை அழி செயக் கருதினோன், குரு
பன்னியை நோக்கினோன், பருகினோன் நறை,
பொன் இகழ் களவினில் பொருந்தினோன் எனும்
இன்னவர் உறு கதி என்னது ஆகவே.

    ‘கன்னியை - திருமணம் ஆகாத கன்னிப்பெண்ணை; அழிசெயக்
கருதினோன்
- கற்பழித்துக் கெடுத்தல்செய்ய நினைத்தவன்;
குருபன்னியை நோக்கினோன் - ஆசான் மனைவியைத் தீய கருத்துடன்
பார்த்தவன்; நறை பருகினோன்  - கள் உண்டவன்; இகழ் களவினில் -
(எல்லாராலும்) இகழப்படுகின்ற களவினால்; பொன் பொருத்தினோன் -
பொன்னைச்சேர்த்தவன்; எனும் இன்னவர் - என்கின்ற (நால்வராய)
இவர்கள்; உறு -அடைகின்ற; கதி - (நரக) கதி; என்னது ஆக -
எனக்குரியது  ஆகுக.’

     ‘கன்னி’ என்பதற்குப் பூப்பு எய்தாத பெண் எனலும் ஆம்.
பெண்களைப் பூப்பு எய்தும் முன்னரேதிருமணம் செய்வித்தல் அக்கால
வழக்கம். ‘ஏ’  ஈற்றசை.                                       110

2212.‘ஊண் அல உண் வழி நாயின் உண்டவன்,
“ஆண் அலன், பெண் அலன், ஆர்கொலாம்?” என
நாணலன், நரகம் உண்டு என்னும் நல் உரை
பேணலன், பிறர் பழி பிதற்றி, ஆக யான்,

     ‘யான்-; உண்வழி ஊண் அல நாயின் உண்டவன் - உண்ணுகின்ற
பொழுது உண்ணுதற்குஉரியது அல்லாதனவற்றை நாய்போல உண்டவன்;
ஆண் அலன்
- ஆண்மைத் தன்மை உடையனல்லன்;பெண் அலன் -
(பிறப்பினால் ஆண் உருவத்தில் உள்ளபடியால்) பெண்ணும் அல்லன்; என-
என்று (உலகம் கேவலமாகப்) பேசும்படி; நாண் அலன் - அதற்குச் சிறிதும்
வெட்கப்படாதவனா யுள்ளவன்; நரகம் உண்டு என்னும் நல் உரை
பேணலன்
- ‘(தீயனசெய்தால்) நல்ல அறிவுரைகளைச் சிறிதும் மதியாதவன்;
பிறர்பழி பிதற்றி -(எப்பொழுதும்) பிறரது பழிகளையே (பலரும் அறியப்)
பிதற்றிக் கொண்டு திரிபவன்; ஆக - (இந் நால்வரும் செல்லும் நரக கதியில்
சேர்வேன்) ஆக.’

     ‘நாய் போல’ என்பது, உண்ணத் தகாதன உண்ணுதல், தானே பிறரை
அடித்து  விரட்டி உண்ணுதல்ஆகியவற்றுக்கு உவமையாகக் கொள்க. பிறர்
நகைப்புக்கிடமாக வீரம், அஞ்சாமை, ஆண்மைசிறிதும் அற்றவன் ‘நாணலன்’