2215. | ‘ஏற்றவற்கு, ஒரு பொருள் உள்ளது, இன்று என்று மாற்றலன், உதவலன், வரம்பு இல் பல் பகல் ஆற்றினன் உழற்றும் ஓர் ஆதன் எய்தும் அக் கூற்று உறு நரகின் ஒர்கூறு கொள்க, யான். |
‘யான்-; ஏற்றவற்கு- தன்னிடம் வந்து யாசித்தவனுக்கு; ஒரு பொருள்- ஒரு பொருளை; உள்ளது என்று உதவலன் -இருக்கிறது என்று சொல்லிக் கொடுக்காமலும்; இன்று என்று மாற்றலன் - இல்லை என்றுசொல்லி (அவர்களைத் தம்பால் வருதலைப்) போக்காமலும்; வரம்பில் பல்பகல் ஆற்றினன்உழற்றும் ஓர் ஆதன் - கணக்கில்லாத பல நாள்கள் செய்து அவனை அங்கும் இங்குமாக உழல(திரிய)ச் செய்யும் ஒரு கொடிய பாவி; எய்தும் அக்கூற்று உறு நரகின் - அடைகி்ன்றஅந்த யமவாதனை நிரம்பிய நரகத்தில்; ஓர் கூறு கொள்க - ஒரு பங்கினை நானும் பெறுவேனாக.’ ‘ஒல்லுவது ஒல்லும் என்றலும் யார்க்கும், ஒல்லாது இல்லென மறுத்தலும் இரண்டும் ஆள்வினைமருங்கிற் கேண்மைப் பால; ஒல்லாது ஒல்லும் என்றலும் யார்க்கும், ஒல்லுவது இல்லென மறுத்தலும்வல்லே, இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர் புகழ்குறை படூஉம் வாயில்” (புறநா.196.) என்பதும் “இசையா ஒரு பொருள் இல் என்றல் யார்க்கும் வசை அன்று; வையத் தியற்கை; நசை அழுங்நின்று ஓடிப் பொய்த்தல்.....குற்றம் உடைத்து” (நாலடி. 111.) என்பதும் இங்கு ஒப்பு நோக்குக.ஆதன் - மூடன், அறிவீனன், பசுப் போன்றவன் என்றும் பொருள்கூறுலாம். 114 2216. | ‘பிணிக்கு உறு முடை உடல் பேணி, பேணலார்த் துணிக் குறு வயிர வாள் தடக் கை தூக்கிப் போய், மணிக் குறு நகை இள மங்கைமார்கள் முன், தணிக்குறு பகைஞரைத் தாழ்க, என் தலை. |
‘பேணலார்த் துணி - பகைவர்களைத் துண்டு படுத்துகின்ற; குறுவயிரவாள்- சிறிய வலிமையான வாளை; தடக்கை தூக்கிப்போய்- நீண்ட கைகளில் (வீரபராக்கிரமத்தோடு) தூக்கிச்சென்ற; (பின்மாட்டாமையால்) பிணிக்கு உறு முடை உடல் பேணி - நோய்களுக்கு இடமாக(நின்று சாவதாக) உள்ள நாற்றம் பிடித்த உடலைப் பாதுகாத்து (உயிர் வாழ விரும்பி); மணிகுறு இள நகை மங்கைமார்கள் முன் - முத்துமணி போன்ற இளைய புன் சிரிப்பினையுடைய மகளிர்முன்னால்; தணிக்குறு பகைஞரை - நம்மால் தாழச் செய்யப்பட வேண்டிய பகைவர்களை; என் தலை தாழ்க - என்தலை வணங்குவதாகுக. போரில் இறவாமல் பாதுகாத்தாலும் இந்த உடல் நிலையற்றது; நோயால் இறந்து படக்கூடியதே, அதனைப் பாதுகாத்து மானம் கெட்டு உயிர்வாழ்வதை விட, உயிரைப்போரில்விட்டு வீரனாக இறப்பதே மேல் என்றான். தாழ்க்க. |