பக்கம் எண் :

பள்ளிபடைப் படலம் 539

‘மன்னர் மன்னவா!- இராச ராசனே!; முன்னை - உனக்கு முன்பாக
அரசாண்ட;  நும் குல முதலுளோர்கள் தாம்- நும்குலத்து
முன்னோர்களுள்;  யாவர் - எவர்; நின்னை நிகர்க்கும் நீர்மையார்!-
உன்னை ஒத்த தன்மை உடையவர்கள்;’ என்று வாழ்த்தினாள் - பாராட்டி
வாழ்த்துரைத்தாள்.

     ‘யாவரே’ ஏகாரம் வினாப்பொருட்டு. வரத்தால் அரசு தேடிவரவும்
வேண்டாம் என்றுவெறுத்தொதுக்கும் இராமனது  குணம் பரதன் மாட்டும்
கண்டனள் ஆதலின்,  பாராட்டி “மன்னர்மன்னவா” என்றாள்.        119

சத்துருக்கனன் கோசலையை வீழ்ந்து வணங்கலும் வசிட்டன் வருதலும்  

2221.உன்ன நைந்து நைந்து, உருகும் அன்புகூர்
அன்னை தாளில் வீழ்ந்து, இளைய அண்ணலும்,
சொன்ன நீர்மையால் தொழுது மாழ்கினான்;
இன்ன வேலைவாய், முனிவன் எய்தினான்.*

    இனைய அண்ணலும் - (பரதன்) தம்பியாகிய சத்துருக்கனனும்; உன்ன
நைந்து நைந்து உருகும் அன்புகூர் அன்னைதாளில்
- நினைக்க மனம்
கரைந்து கரைந்து, அன்பு மிகுந்த தாயாகிய கோசலையின்திருவடிகளில்;
வீழ்ந்து
- விழுந்து; சொன்ன நீர்மையால் - பரதன் சொல்லியதன்மை
போலவே தொழுது அழுது சொல்லி மயங்கினான்; இன்ன வேலைவாய் -
இத்தகையசமயத்தின் கண்; முனிவன் - வசிட்ட முனிவன்; எய்தினான் -
அந்த இடத்துக்குவந்து சேர்ந்தான்.

     ‘சொன்ன நீர்மையால்’ என்பதனால் பரதன் புலம்பிய போதே
இளையவனும் புலம்பினான்என்க. இருவர்க்கும் இராமனைப் பிரிந்த
துக்கமும், தந்தையை இழந்த துக்கமும்ஒன்றே.                     120

பரதன் வசிட்டனை வணங்கலும் வசிட்டன் தழுவி அழுதலும்  

2222.வந்த மாதவன் தாளில், வள்ளல் வீழ்ந்து,
‘எந்தை யாண்டையான்? இயம்புவீர்?’ எனா,
நொந்து மாழ்கினான்; நுவல்வது ஓர்கிலா
அந்த மா தவன் அழுது புல்லினான். *

     வள்ளல் - பரதன்; வந்த மா தவன் தாளில் வீழ்ந்து - அங்கே
வந்தவசிட்ட முனிவன் திருவடிகளில் விழுந்து; ‘எந்தை யாண்டையான் -
என் தந்தையாகியதசரதன், எவ்விடத்தான்?; இயம்புவீர் - சொல்வீராக?;’
எனா - என்று; நொந்து மாழ்கினான் - மனம் கெட்டு மயங்கினான்;
நுவல்வது ஓர்கிலா அந்த மாதவன் - சொல்வதற்கு வகையறியாத