விரிந்த கங்கை - அகன்ற கங்காநதி; விண் என - ஆகாயம் ஆக; சிந்து முத்தம் மீன் என - (கங்கையாறு) சிந்துகின்ற முத்துகள் விண்மீன்களாக; கமலத்து அன்ன ஆனனம் - தாமரை மலர் போன்ற முகம்; அமுதச் செவ்வாய் - அமுதமூறும் சிவந்தவாய் ஆகியவற்றை உடைய; மின் அன்ன தேன் நனை குழலார் - தேன் சிந்தும் கூந்தலை உடைய மின்னலை ஒத்த மகளிர்; ஏறும் அம்பிகள் - ஏறிச் செலுத்தும் ஒடங்கள்; வானவர் மகளிர் பண்ணை முற்றி - தேவ மகளிர்கள் நீர் விளையாட்டை முடித்து; ஊறும்மானமே நிகர்த்த - மேலேறிச் செல்லுகின்ற விமானங்களை ஒத்தன. கங்கை நீர்ப்பரப்புக்கு ஆகாயம், கங்கை சிந்தும் முத்துகளுக்கு நட்சத்திரங்கள்,மகளிர்க்குத் தேவமாதர், ஓடங்களுக்கு விமானங்கள் உவமையாயின. பண்ணை - விளையாட்டு.“கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு” (தொல். சொல். உரி. 21) என்பது காண்க. ‘மாது’ ‘ஓ’ அசை. அணிந்துள்ள மலர்களின் தேனால் நனைந்த கூந்தல் என்க. 59 2362. | துளி படத் துழாவு திண் கோல் துடிப்பு இரு காலின் தோன்ற, நளிர் புனல் கங்கை ஆற்றில் நண்டு எனச் செல்லும் நாவாய், களியுடை மஞ்ஞை அன்ன, கனங் குழை, கயல் கண், மாதர் ஒளிர் அடிக் கமலம் தீண்ட, உயிர் படைத்தனவே ஒத்த. |
துளிபட - துளிகள் உண்டாகும்படி; துழாவு - (நீரைத்) துழாவுகின்ற; திண்கோள்- வலிய கோலை உடைய; துடுப்பு - துடுப்புகள்; இரு காலின் தோன்ற -இரண்டு கால்களைப் போலத் தோன்ற; நளிர் புனல் கங்கை ஆற்றில்- குளிர்ந்த நீரைஉடைய கங்கா நதியில்; நண்டு எனச் செல்லும் நாவாய் - நண்டு என்று சொல்லும்படிசெல்கின்ற மரக்கலம்; களி உடைய மஞ்ஞை அன்ன - களிப்பை உடைய மயிலை ஒத்த; கணங்குழை- பொற்றோடு அணிந்த; கயல்கண் - மீன் போன்ற கண்ணை உடைய; மாதர் -மகளிரது; ஒளிர் அடிக் கமலம் தீண்ட - விளங்குகின்ற அடித் தாமரைகள் படுதலால்; உயிர் படைத்தனவே ஒத்த - உயிர் பெற்றனவே போன்றிருந்தன மகளிர் பாதம் பட்டத்தால் நாவாய்கள் உயிர்பெற்றன போன்றன என்று தற்குறிப்பேற்றஉவமையாக்கினார். துடுப்புக் கம்புகள் இருபுறமும் இருத்தல் கால்கள் போலத் தோன்றின. நண்டுஒதுங்கிச் செல்லும் இயல்பினது ஆதலின் நீரோட்டத்துக்கு ஏற்ப ஒதுங்கிச் சேறலின் நண்டு போலும் நாவாய் என்றார். 60 |