குறள் உரையில் (566.) பரிமேலழகர் கூறியவாற்றான் அறிக. இனி சூதாடுதல், வேட்டையாடுதல்,பகலிற்றூங்குதல், வம்பளத்தல், பெண்பித்தனாதல், குடித்தல், பாட்டு, கூத்து, இசைப்பிரியனாதல், ஊர் சுற்றல் என்னும் காமத்தினால் உண்டாக பத்துத் துக்கங்கள் என்பாரும் உளர். சொல்லிய -சொல்லப்பட்டவை எனச் செயப்பாட்டுவினை. துயர் விளைக்கும் செயல்களைத் துயர் என்றது ஆகுபெயர், ‘ஏ’ ஈற்றசை. 20 1419. | ‘யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின், போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது; தன் தார் ஒடுங்கல் செல்லாது; அது தந்தபின், வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ? |
‘(ஒருவன்) யாரொடும் - யார் ஒருவரோடும்; பகை கொள்ளலன் என்றபின் -மாறுபாடு கொள்வதிலன் என்றால்; (அவனுக்குப்) போர் ஒடுங்கும் - சண்டை இல்லாமற்போகும்; புகழ் ஒடுங்காது - புகழ் குன்றாது நிறையும்; தன் - அவனுடைய; தார்- படை; ஒடுங்கல் செல்லாது - கெடாது; அது தந்தபின் - அவ்வாறு படைகெடாது வளருமாயின்; வேரொடும் கெடல் - (அவனைப் பகைக்கும் பகை) அடியோடு அழிதலை; வேண்டல்உண்டாகுமோ? - மட வேண்டிப் பெருதல் உண்டாகுமோ’ (வேண்டாம் தானே நடக்கும்.) யாரொடும் பகைகொள்ளாமல் இருந்தால் புகழ் பெருகும்; படை அழியாது வளரும். எனவேஅவனைப் பகைக்கப் பிறர் நினைக்கினும் அது செய்யார்; அதனால், பகையே இல்லாது ஒழியும். தார்என்பது முன்னணிப் படையைக் குறிக்கும். இங்குப் பொதுவாகப் படை என்னும் கருத்தில் வந்துள்ளது. எல்லாரிடமும் அன்பு செய்தல் ஆக்கம் தரும் என்ற கருத்தினை “பலத்தால் வெல்லப் பட்டபகைவன் சமயம் வாய்த்தபோது கேடு செய்வான்; அன்பால் வெல்லப் பட்ட பகைவன் எப்போதும் கெடுதல் செய்யான் ” ஒஎன்னும் புத்த பகவான் மொழியோடு இணைத்துப் பார்க்கலாம். “ஊருடன் பகைக்கின்வேருடன் கெடும்” என்னும் (கொன்றை. 6.) கருத்தையும் இங்குக் கருதுக. 21 1420. | ‘கோளும் ஐம்பொறியும் குறைய, பொருள் நாளும் கண்டு, நடுக்குறு நோன்மையின் ஆளும் அவ் அரசே அரசு; அன்னது, வாளின் மேல் வரு மா தவம், மைந்தனே! |
‘மைந்தனே - மகனே; கோளும் ஐம்பொறியும் - தத்தமக் கேற்ற புலன்களைக்கொள்ளும் தன்மையில் வல்ல ஐந்து பொறிகளும்; குறைய - அடங்கியிருக்க; பொருள்நாளும் கண்டு - அரசுக்கு வரும் வருவாயை நாள்தோரும் ஆராய்ந்து; நடுக்குறு நோன்மையின்- பகைவர் அஞ்சத்தகும் வலிமையோடு கூடி; ஆளும் - ஆட்சிபுரிகின்ற; |