பக்கம் எண் :

64அயோத்தியா காண்டம்

குறள் உரையில் (566.)  பரிமேலழகர்  கூறியவாற்றான் அறிக.  இனி
சூதாடுதல், வேட்டையாடுதல்,பகலிற்றூங்குதல், வம்பளத்தல், 
பெண்பித்தனாதல்,  குடித்தல்,  பாட்டு,  கூத்து,  இசைப்பிரியனாதல், ஊர்
சுற்றல் என்னும் காமத்தினால் உண்டாக பத்துத் துக்கங்கள் என்பாரும் 
உளர். சொல்லிய -சொல்லப்பட்டவை எனச் செயப்பாட்டுவினை.  துயர்
விளைக்கும் செயல்களைத் துயர் என்றது ஆகுபெயர், ‘ஏ’  ஈற்றசை.    20

1419.‘யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்,
போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது; தன்
தார் ஒடுங்கல் செல்லாது; அது தந்தபின்,
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ?

     ‘(ஒருவன்)  யாரொடும் -  யார் ஒருவரோடும்;  பகை கொள்ளலன்
என்றபின் -
மாறுபாடு கொள்வதிலன் என்றால்;  (அவனுக்குப்) போர்
ஒடுங்கும் -
சண்டை இல்லாமற்போகும்;  புகழ் ஒடுங்காது - புகழ்
குன்றாது  நிறையும்;  தன் - அவனுடைய;  தார்- படை;  ஒடுங்கல்
செல்லாது -
கெடாது;  அது தந்தபின் - அவ்வாறு படைகெடாது
வளருமாயின்; வேரொடும்  கெடல் - (அவனைப் பகைக்கும் பகை)
அடியோடு அழிதலை;  வேண்டல்உண்டாகுமோ? - மட வேண்டிப்
பெருதல் உண்டாகுமோ’ (வேண்டாம் தானே நடக்கும்.)

      யாரொடும் பகைகொள்ளாமல்  இருந்தால்  புகழ் பெருகும்;  படை
அழியாது வளரும்.  எனவேஅவனைப் பகைக்கப் பிறர் நினைக்கினும் அது
செய்யார்; அதனால், பகையே இல்லாது ஒழியும்.  தார்என்பது முன்னணிப்
படையைக் குறிக்கும். இங்குப் பொதுவாகப் படை என்னும் கருத்தில்
வந்துள்ளது. எல்லாரிடமும்  அன்பு  செய்தல் ஆக்கம் தரும் என்ற
கருத்தினை “பலத்தால்  வெல்லப் பட்டபகைவன் சமயம் வாய்த்தபோது
கேடு செய்வான்;  அன்பால் வெல்லப் பட்ட பகைவன் எப்போதும் கெடுதல்
செய்யான் ” ஒஎன்னும் புத்த பகவான் மொழியோடு  இணைத்துப்
பார்க்கலாம். “ஊருடன் பகைக்கின்வேருடன் கெடும்”  என்னும் (கொன்றை.
6.) கருத்தையும் இங்குக் கருதுக.                                  21

1420.‘கோளும் ஐம்பொறியும் குறைய, பொருள்
நாளும் கண்டு, நடுக்குறு நோன்மையின்
ஆளும் அவ் அரசே அரசு; அன்னது,
வாளின் மேல் வரு மா தவம், மைந்தனே!

     ‘மைந்தனே - மகனே;  கோளும் ஐம்பொறியும் - தத்தமக் கேற்ற
புலன்களைக்கொள்ளும்  தன்மையில் வல்ல ஐந்து பொறிகளும்;  குறைய -
அடங்கியிருக்க;  பொருள்நாளும் கண்டு - அரசுக்கு வரும்  வருவாயை
நாள்தோரும் ஆராய்ந்து;  நடுக்குறு நோன்மையின்- பகைவர்
அஞ்சத்தகும் வலிமையோடு கூடி;  ஆளும் - ஆட்சிபுரிகின்ற;