துலையின் நடுமுள்ளை நாக்கு எனல் வழக்கு. நடுவு நிலைமைக்குத் துலாக்கோல் உவமையாதல்“சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபாற், கோடாமை சான்றோர்க் கணி” என்பதிற் (குறல். 118) காண்க. பொன்னெடை என்பது மிகத் துல்லியமாக நிறுக்கப்படுவது; ஆதலின் ‘செம்பொன் துலை’ என்றார். நல்லவர் - இங்கு அமைச்சர். ‘காலமறிதல்’ என்னும் திருக்குறள்அதிகாரத்தின்கண் ‘காலம்’ அரசர்க்கு இன்றியமையாத சிறப்புடையது எனல் காண்க. 27 1426. | “ஒர்வின் நல் வினை ஊற்றத்தினார் உரை போர் இல் தொல் விதி பெற்று உளது” என்று அரோ, தீர்வு இல் அன்பு செலுத்தலின், செவ்வியோர் ஆர்வம் மன்னவற்கு ஆயுதம் ஆவதே. |
‘ஓர்வின் - ஆய்வினை உடைய; நல்வினை ஊற்றத்தினார் - நல்ல தொழிலின்கண் எப்பொழுதும் முயலும் முயற்சியை உடைய முனிவர்களது; உரை - மொழியை; பேர்வுஇல் தொல்விதி- மாறு படுதல் இல்லாத பழைய விதி; பெற்று உளது - அடைந்து (அவ்வுரைவழி) நடக்கின்றது; என்று - என்று கருதி; தீர்வுஇல் அன்பு செலுத்தலின் - அவர்களிடத்து நீங்காதஅன்பைச் செலுத்துகின்ற காரணத்தால்; செல்வியோர் ஆர்வம் - நன்மையுடைய அப்பெரியோர்தம்பால் செலுத்தும் விருப்பம்; மன்னவற்கு - அரசனுக்கு; ஆயுதம் ஆவது - படைக்கலம்ஆகும்.’ முன்னர் (1416) ‘அவர் ஏவ நிற்கும் விதி’ என்றதும் காண்க. முனிவர்க்கு ஊழும் கட்டுப்பட்டு நடக்கும். அதனால் அவர்களது பிரியத்தைக் சம்பாதித்துக்கொள்ளுதல் மன்னவற்குப் பெரும்படையாகும். ‘அன்பீனும் ஆர்வம் உடைமை அதுவீனும், நண்பு என்னும் நாடாச் சிறப்பு” என்ற குறளைப்(குறள் - 74) பின்னிரண்டு வரிகளுடன் ஒப்பிடுக. ‘அரோ’ ‘ஏ’ ஈற்றசை. 28 1427. | ‘தூமகேது புவிக்கு எனத் தோன்றிய வாம மேகலை மங்கையரால் வரும் காமம் இல்லை எனின், கடுங் கேடு எனும் நாமம் இல்லை; நரகமும் இல்லையே.’ |
‘புவிக்கு - இந்த உலகில் உள்ளவர்க்குத் (தீமை விளைக்கத் தோன்றும்); தூமகேது என - வால் நட்சத்திரம் என்று சொல்லும்படி; தோன்றிய - பிறந்துள்ள,வாம மேகலை மங்கையரால் - அழகிய மேகலாபரணம் அணிந்த பெண்களால்; வரும் -உண்டாகின்ற; காமம் இல்லை எனின் - காம நோய்மட்டும் இல்லையானால்; கடும்- கொடிய; கேடு எனும் நாமம் இல்லை - கெடுதி என்னும் சொல்லே இல்லையாகும்; நரகமும் இல்லையே - நரகத் துன்பமும் இல்லை.’ |