பக்கம் எண் :

70அயோத்தியா காண்டம்

.எண்ணும் நல்வினை முற்றுவித்து, எற்றினான்,
வெண் நிறத்த தருப்பை விரித்து அரோ.

     நாகணை வள்ளலை நண்ணி - அரவணையில் அறிதுயில் அமர்ந்த
அண்ணலைச் சென்றடைந்து;(வழிபட்டு அவனக்கு முன் இராமனை) 
நான்மறை - நால் வேத முறைப்படி அமைந்த;  புண்ணியப்புனல்
ஆட்டி-
நன்மையுடைய தீர்த்தங்களால் நீராட்டி; புலமையோர் எண்ணும்-
அறிவுடையோர் எண்ணுகின்ற;  நல்வினை - நல்ல சடங்குகளை;
முற்றுவித்து - முடியச்செய்து;  வெண்நிறத்த- வெண்மையான;  தருப்பை
விரித்து -
தருப்பைப் புல்லைப் பரப்பி; ஏற்றினான்- அதன்மேல்
எழுந்தருளச் செய்தான்.

     பட்டம் பெற்று முடிசூடுவார்க்கு முன்னர் நிகழும் சடங்குகளில்
திருமால் கோயிலில்  நீராட்டுதலும்ஒன்று போலும். முதல்நாள் விரதம்
இருக்கச் செய்தலின் தருப்பையைப் பரப்பி அதன்மேல் ஏறச்செய்தான்.
‘ஆயிர மௌலியான்’ தானம் அடைந்து; நாகணை வள்ளலை - இராமனை,
புனல் ஆட்டி என நேரே கூறலும்ஒன்று. நண்ணினான். என மேல் முடிய
இங்கு நண்ணி எனத் தொடங்கியது அந்தாதித்தொடை. ‘அரோ’-ஈற்றசை. 31

தயரதன் நகரை அழகுசெய்ய ஆணையிடல்  

1430.ஏற்றிட, ஆண்தகை இனிது இருந்துழி,
நூல் தட மார்பனும், நொய்தின் எய்தப்போய்,
ஆற்றல் சால் அரசனுக்கு அறிவித்தான்; அவன்,
‘சாற்றுக, நகர் அணி சமைக்க’ என்றனன்.

     ஏற்றிட - (தர்ப்பாசனத்தில்) இருக்கச்செய்ய;  ஆண்தகை - இராமன்;
இனிது  இருந்துழி - (விரதாதி சடங்குகளைச் செய்து கொண்டு)
இனிமையாக இருந்தபொழுது; நூல்  தடமார்பனும் - முப்புரி  நூலைத்
தரித்த அகன்ற மார்பினை உடைய வசிட்டனம்; நொய்தின் எய்தப் போய்-
விரைவாக அடையச் சென்று; ஆற்றல்சால் அரசனுக்கு -வலிமை மிகுந்த
சக்கரவர்த்திக்கு; அறிவித்தான் - (செய்தியைத் ) தெரிவித்தான்;அவன் -
அம்மன்னவன்; ‘நகர் அணி சமைக்க - நகரத்தை அழகு செய்ய; சாற்றுக-
பறையறைவிப்பீராக;  என்றனன் - என்று சொன்னான்.

     இருந்த உழி - இருந்துழி,  விகாரம். எய்த - அருகில்,  வசிட்டன்
இராமனுக்கு உரிய சடங்குகள்நிறைவேற்றப்பட்ட செய்தியைத் தெரிவித்தான்.
அதன் பின்னர் முரசு அறைக என்றான் தயரதன்.                    32