முகில் வண்ணன் - இராமன்; இச்செல்வம் - அரசுச் செல்வம். 76-11 203. | ‘கொங்கு அலர் நறு விரைக் கோதை மோலியாய்! சங்க நீர் உலகத்துள், தவத்தின் தன்மையால், அங்கணன் அரசு செய்தருளும் ஆயிடின்’- சிங்களர் - ‘இங்கு இதில் சிறந்தது இல்’ என்றார். |
கோதை - மாலை; மோலி - மௌலி, அதாவது மகுடம்; அங்கணன்-அருள் கண்ணையுடைய இராமன். 76-12 204. | ஆதியின் மனுவும் நின் அரிய மைந்தற்குப் பாதியும் ஆகிலன்; பரிந்து வாழ்த்தும் நல் வேதியர் தவப் பயன் விளைந்ததாம்’ என, சேதியர் சிந்தனை தெரியச் செப்பினார். |
ஆதியின் மனு - வைவஸ்வத மனு, சூரிய குல முன்னோன்; பரிந்து- அன்புகொண்டு; சேதியர் - சேதி நாட்டவர். 76-13 205. | ‘அளம் படு குரை கடல் அகழி ஏழுடை வளம் படு நெடு நில மன்னர் மன்னனே! உளம் படிந்து உயிர் எலாம் உவப்பது ஓர் பொருள் விளம்பினை பெரிது!’ என விராடர் கூறினார். |
அளம் - வயல், உப்பளம் என்பது போல. 76-14 |