பக்கம் எண் :

716அயோத்தியா காண்டம்

2. மந்தரை சூழ்ச்சிப் படலம்

206. பொன்னும், மா மணியும்.
     புனை சாந்தமும்,
கன்னி மாரொடும்
     காசினி ஈட்டமும்,
இன்ன யாவையும்
     ஈந்தனள், அந்தணர்க்கு,
அன்னமும் தளிர்
     ஆடையும் நல்கினான்.

     அந்தணர்க்கு ஈந்தனள் என முடிக்க. நல்கினாள். கோசலை.      9-1

207.நல்கி, நாயகன்
     நாள்மலர்ப் பாதத்தைப்
புல்லிப் போற்றி,
     வணங்கி, புரை இலா
மல்லல் மாளிகைக்
     கோயில் வலங்கொளா,
தொல்லை நோன்புகள்
     யாவும் தொடங்கினாள்.

     புரை - குற்றம். உயர்ச்சி என்பதும் ஆம்; தனக்கு மேல் உயர்ச்சி
இல்லாத எனஉரைக்க. நோன்பு - விரதம்.                       9-2

208.கடி கமழ் தாரினான்,
     கணித மாக்களை
முடிவ உற நோக்கி, ஓர்
     முகமன் கூறி, பின்,
‘வடி மழுவாளவற்
     கடந்த மைந்தற்கு
முடி புனை முதன்மை நாள்
     மொழிமின்’ என்றனன்.

     கணித மாக்கள் - சோதிடர்; வடி மழுவாளவன் - பரசு ராமன். 9-3