பக்கம் எண் :

மிகைப்பாடல்கள் 717

3. கைகேயி சூழ்வினைப் படலம்

209.வந்து மன் நகரில் தம்தம்
     வகைப்படும் உருவம் மாற்றி,
சுந்தரத் தடந்தோள் மாந்தர்
     தொல் உருச் சுமந்து தோன்றாது,
அந்தரத்து அமரர், சித்தர்,
     அரம்பையர், ஆதி ஆக
இந்திரை கொழுநற் போற்றி
     இரைத்துமே எய்தி நின்றார்

     மன் நகர் - அரச நகரம், அயோத்தி. அமரர், சித்தர், அரம்பையர்
முதலியோர் வடிவம் மறைத்து மனித வடிவில் அயோத்தியில் வந்து நின்றார்
என்பதாம்; இந்திரை - திருமகள்.                              75-1

4. நகர் நீங்கு படலம்

210.விழுந்து பார்மிசை,
     வெய்து உயிர்த்து, ஆவி சோர்ந்து,
எழுந்து, ‘என் நாயகனே!
     துயர் ஏது எனாத்
தெளிந்திலேன்; இது
     செப்புதி நீ’ எனா,
அழுந்தினாள்; பின்னர்
     அரற்றத் தொடங்கினாள்.

     வெய்து உயிர்த்து - வெப்பமாக மூச்சு விட்டு, பெருமூச்சு விடுதலாம்;
 அழுந்தினாள்- துன்பத்தில் மூழ்கினாள்.                       29-1

211.அன்னாள் இன்ன பன்னி
     அழியத் துயரால், மன்னர்
மன்னானவனும் இடரின்
     மயங்கி, ‘மைந்தா! மைந்தா!
முன்னே வனம் ஏகிடல் நீ
     முறையோ? முதல்வா! முறையோ?
என்னே, யான் செய் குறைதான்?’
     என்றே இரங்கி மொழிவான்;

     பன்னி - பலமுறை சொல்லி; மன்னர் மன் ஆனவனும் - தயரதனும்.
                                                          53-1