பக்கம் எண் :

718அயோத்தியா காண்டம்

212.உணர்வு ஏதும் இலாள் உரையால்
     உரை சால் குமரன் நெடு நாள்
புணரான் நிலம்; மா வனமே
     போவானேயாம்; என்னில்,
இணரே பொலி தார் நிருபா;
     இடரால் அயர்வாய்; இதுவும்
துணையோ? - துணைவா!’ என்றாள்;
     ‘துயரேல் ! துயரேல்!’ என்றாள்.

     குமரன் - இராமன்;  இணர் - பூங்கொத்து.                53-2

213.‘ “சேல் ஆகிய மா முதல்வன்
     திரு உந்தியின் நீள் மலரின்-
மேல் ஆகிய நான்முகனால்,
     வேதங்களின் மா முறையின்-
பால் ஆகிய யோனிகளின்
     பல ஆம் வருணம் தருவான்,
நால் ஆகியது ஆம் வருணம்தனின்,
     முன் எமை நல்கினனால்.

     சேல் ஆகிய மா முதல்வன் - மீனாக அவதாரம் செய்த திருமால்;
முன் -முதல் வருணம், அந்தணர் பிறப்பில்.                      76-1

214.‘ “அந் நான்மறையோன் வழியில்,
     அருள் காசிபன் நல் மைந்தன்,
மின் ஆர் புரி நூல் மார்பன்,
     விருந்தேசனன் மெய்ப் புதல்வன்,
நல் நான்மறை நூல் தெரியும்
     நாவான் சலபோசன் எனச்
சொன்னான் முனிவன் தரு
     சுரோசனன் யான்” என்றான்.

     பிரமன் - காசிபன்,  விருத்தேசனன்,  சலபோசன், சுரோசனன் எனக்
குல முறைக்காண்க.                                         76-2

215.‘தாவாத அருந்தவர் சொல்
     தவறாததானால், தமியேன்
சாவாதவரும் உளரோ? தண்டா
     மகவு உண்டு’ என்றே