பக்கம் எண் :

மிகைப்பாடல்கள் 719

 ஓவாதவர் முன் நின்றறேன்;
     ஒரு சொல் உடையாது அவரும்,
பூவார் அனலுள்பொன்றி,
     பொன் - நாடு அதனின் புக்கார்.’

     தவறாது அதனால் - எனப் பிரிக்க; ஒரு சொல் உடையாது -
ஒன்றும் பேசாது.                                           86-1

216.இம் மா மொழி தந்து அரசன்
     இடர் உற்றிடுபோழ்தினில், அச்
செம் மா மயில் கோசலையும்,
     திகையா, உணர்வு ஓவினளால்;
மெய்ம்மாண் நெறியும், விதியின்
     விளைவும், தளர்வின்றி உணரும்
அம்மா தவனும் விரைவோடு
     அவலம் தரு நெஞ்சினனாய்.

     ஓவினள் - ஒழிந்தாள்;  மாதவன் - வசிட்டன்               87-1

217.என்று என்று சீற்றத்து
     இளையோன் இது இயம்பிடாமுன்,
கன்று ஒன்றும் ஆவின்
     பல யோனியும் காத்த நேமி
வன் திண் சிலைக் கைம்
     மனு என்னும் வயங்கு சீர்த்திக்
குன்று ஒன்று தோளான்
     மருமான் இவை கூறலுற்றான்;

     மருமான் - பரம்பரையில் வந்தவன்.  இராமன்.             127-1

218.ஆய் தந்த மென் சீரை அணிந்து
     அடி தாழ்ந்து நின்ற
சேய் உந்து நிலை நோக்கினள்,
     சேய் அரிக் கண்கள் தேம்ப,
வேண் தந்த மென் தோளி தன்
     மென் முலை பால் உகுப்ப -
தாய், ‘நிந்தை இன்றிப் பல ஊழி
     தழைத்தி!’ என்றாள்.

     ஆய் - தாய்,  கைகேயி;  தாய் - சுமித்திரை.               147-1