219. | ‘வானமே அனையது ஓர் கருணை மாண்பு அலால் ஊனம் வேறு இலானுடன், உலகம், யாவையும், கானமே புகும்எனின், காதல் மைந்தனும் தானுமே ஆளும்கொல் தரை?’ என்றார் சிலர். |
ஊனம் வேறு இலான் - இராமன். இராமனுடன் அனைவரும் காடு சென்றால் கைகேயியும்,பரதனுமே ஆள்வார்களோ இப்பூமியை என்பது மக்கள் கூற்று,. 191-1 220. | போயினான் நகர் நீங்கி - பொலிதரு தூய பேர் ஒளி ஆகி, துலங்கு அருள் ஆய மூவரும் ஆகி, உயிர்த் தொகைக்கு ஆயும் ஆகி, அளித்தருள் ஆதியான். |
பேரொளி ஆகி, மும்மூர்த்திகள் ஆகிய பிரமன், திருமால், சிவன் ஆகி; உயிர்த்தொகைக்கு ஆயும் ஆகி - உயிர்களுக்குத் தாயும் ஆகி உள்ள இராமன். 234-1 5. தைலம் ஆட்டு படலம் 221. | தொடுத்த கலிடைச் சிலர் துவண்டனர், துயின்றார்; அடுத்த அடையில் சிலர் அழிந்தனர் அயர்ந்தார்; உடுத்த துகில் சுற்று ஒரு தலைச் சிலர் உறைத்தார்; படுத்த தளிரில் சிலர் பசைந்தனர் அசைந்தார். |
கல் இடை - கல்லிடத்து; அடை - இலை; பசைந்தனர் - அன்பு கொண்டவராய். 16-1 |