பக்கம் எண் :

மிகைப்பாடல்கள் 721

222.ஒரு திறத்து உயிர் எலாம்
     புரந்து, மற்று அவண்
இரு திறத்து உள வினை
     இயற்றும் எம்பிரான்
தரு திறத்து ஏவலைத்
     தாங்கி, தாழ்வு இலாப்
பொரு திறல் சுமந்திரன்
     போய பின்னரே.

     இரு திறத்து உள வினை - நல்வினை,  தீவினை.             46-1

223.துந்துமி முழங்க, தேவர்
     தூய் மலர் பொழிந்த வாழ்த்த,
சந்திர வதனத்து ஏயும்
     அரம்பையர் தழுவ, தங்கள்
முந்து தொல் குலத்துளோரும்
     முக்கணான் கணமும் சூழ,
அந்தரத்து அரசன் சென்றான்,
     ஆன தேர்ப் பாகன் சொல்லால்.

     அரசன் - தயரதன்.                                    59-1

6. கங்கைப் படலம்

224.அன்ன காரணத்து
     ஐயனும், ஆங்கு அவர்
உன்னு பூசனை
     யாவும் உவந்தபின்,
மின்னு செஞ் சடை
     மெய்த் தவர் வேண்டிட,
பன்ன சாலையின்
     பாடு இருந்தான் அரோ.

     பன்ன சாலை - தவத்தோர் தங்கும் குடில்;  பர்ண சாலை - பன்ன
சாலை ஆயிற்று; இலை, தழைகளால் வேயப்பெற்றது. ‘அரோ’ அசை.   27-1

7. குகப் படலம்

225.நின்றான் நெஞ்சில்
     நிரம்புறும் அன்பால்,