பக்கம் எண் :

மிகைப்பாடல்கள் 723

  பொற்றொடி யோடும் ஐயன்
     துயில்தரும் புன்மை நோக்கி,
இற்றது ஓர் நெஞ்சன் ஆகி,
     இரு கண் நீர் அருவி சோர,
உற்ற ஓவியம்அது என்ன,
     ஒரு சிலை அதனின் நின்றான்.

     ஒரு சிலை - ஒரு கல். இனி ஒரு வில் எனலும் ஆம் ‘வில்லை
ஊன்றிய கையோடும்நின்றான்’ என வருதலின்.                   22-3

9. சித்திரகூடப் படலம்

229.‘நெய் கொள் நீர் உண்டு,
     நெருப்பு உண்டு, நீண்டு, மைந் நிறைந்த
வை கொள் வேல் எனக்
     காலனும் மறுகுறும் கண்ணாய்!
மெய்கள் நோகின்ற பிடிகளை
     விரும்பிய வேழம்
கைகள் நோகில தாங்கின
     நிற்பன காணாய்!’

     மெய் நோவுற்ற பெண்யானைகளை ஆண் யானைகள் தம் கை நோவு
கருதாது தாங்கிக்கொண்டுநிற்பனவாம்.                           36-1

230.‘விடம் கொள் நோக்கி! நின்
     இடையின் மின் என வெருவி,
படம் கொள் நாகங்கள் முழை
     புகப் பதைப்பன பாராய்!
மடங்கள் ஆளிகன் எனக்
     கொடு மழைஇனம் முழங்க,
கடம் கொள் கார் மதக்
     மைம்மலை இரிவன காணாய்!

     மின்னலைக் கண்டு பாம்பு அஞ்சும். இடிகேட்டு வெருளும் நாகம். இடி,
மின்னல் இரண்டும்ஒன்றே. சிங்கம் போல மேகம் முழங்க யானைகள்
ஓடுகின்றன.                                                36-2

221.‘எய்த இன்னல் வந்த போது
     யாவரேனம் யாவையும்