| செய்ய வல்லர் என்று கொள்க; சேண் நெறிக்கண் நீங்கிட, மைய கண்ணி செய்ய பாதம் வல்ல ஆய; எம்பிதன் கைகள் இன்று பன்னசாலை கட்ட வல்ல ஆயவே.’ |
‘துன்பம் வந்த போது யாரும் எவையும் செய்ய வல்லவர்’ என்ற உலக நீதி இங்குக்கூறப்படுகிறது. 50-1 232. | ‘தினைத் துணை வயிறு அலாச் சிற்றெறும்புகள் வனத்திடைக் கரிகளை வருத்தி வாழ்வன; அனைத்து உள உயிர்களும் யாவும் அங்ஙனே; மனத்து இடர் நீங்கினார் இல்லை. மன்னனே!’ |
எறும்பும் யானையை வருத்துகிறது. எல்லா உயிர்களும் ஒன்றையொன்று வருத்துகின்றன. துன்பம்அற்றவர் யாரும் இல்லை என்றபடி. 55-1 10. பள்ளிபடைப் படலம் 233. | ஆய காதல் தனையனைத் தந்த அத் தூய தையல் தொழிலுறுவார், ‘உனைக் கூயள் அன்னை’ என்றே சென்று கூறலும், ஏய அன்பினன்தானும், சென்று எய்தினான். |
தொழில் உறுவார் - ஏவல் மகளிர்; அன்பினன் - இராமன். 41-1 234. | ‘தீ அன கொடியவள் செய்த செய்கையை நாயினேன் உணரின், நல் நெறியின் நீங்கலாத் |
|