| தூயவர்க்கு இடர் இழைத்து உழலும் தோமுடை ஆயவர் வீழ் கதி அதனின் வீழ்க, யான்’ |
தோம் - குற்றம். நல்லவர்க்குத் தீங்கு செய்யும் கயவர்கள் செல்லும் நரககதியில் நான் செல்வேனாக. 116-1 235. | உந்து பொன் தடந் தேர் வலானொடும், மந்திரப் பெருந் தலைவர், மற்றுளோர், தந்திரத் தனித் தலைவர், நண்பினோர், வந்து சுற்றும் உற்று, அழுது மாழ்கினார். |
தேர் வலான் - சுமந்திரன்; மாழ்கினார் - மயங்கினார், 125-1 236. | என்று கொண்டு மா தவன் இயம்பலும்,- நின்று நின்று தான் நெடிது உயிர்த்தனன்; ‘நன்று, நன்று!’ எனா நகை முகிழ்த்தனன்;- குன்று குன்றுறக் குலவு தோளினான். |
மா தவன் - வசிட்டன்; முகிழ்த்தல் - மொக்குவிட்டு மலர்தல், அங்குச் சிரித்தான் என்பது பொருள்; தோளினான் - பரதன். 131-1 237. | அன்னதாக, அங்கு, ஆறு பத்து எனச் சொன்ன ஆயிரம் தோகைமார்களும், துன்னி வந்தனர்- சோர்வு இலாது, அவர் மின்னும் வாள் எரிமீது வீழவே. |
|