பக்கம் எண் :

மந்தரை சூழ்ச்சிப் படலம் 75

1439.முத்தினின் முழுநிலவு எறிப்ப, மொய்ம் மணிப்
பத்தியின் இள வெயில் பரப்ப, நீலத்தின்
தொத்துஇனம் இருள் வரத் தூண்ட, சோதிட
வித்தகர் விரித்த நாள் ஒத்த, வீதியே,

     வீதி - (அயோத்தி நகரத்) தெருக்கள்;  முத்தினின் - (அலங்கரித்த
முத்து மாலைகளில் உள்ள) முத்துக்களால்; முழுநிலவு எறிப்ப -
முழுமையான நிலவொளியை எங்கும்விளங்கச் செய்ய; மொய் - நெருங்கிய;
மணிப் பத்தியின் - மணிக்கற்கள்வரிசை;  இளவெயில் பரப்ப -
இளமையான வெயிலைப் பரவச் செய்ய; நீலத்தின் தொத்துஇனம் -
(அழகுபடுத்திய)  நீலமணிகளின் தொகுதியான கூட்டம்; இருள் வரத்
தூண்ட
- எங்கும் இருள் உண்டாகச் செய்ய; (இவற்றால்)  சோதிட
வித்தகர்
- சோதிட நூல் அறிஞர்;விரித்த - விளக்கிக் கூறுகின்ற; நாள்
ஒத்த -
நாளை ஒத்தன.

     பகல்,  நிலவு,  இருள் ஆகியவற்றோடு கூடிய ஒருநாள் போல,
இவ்வீதிகள் மணியால் இளவெயிலும்,முத்தால் நிலவொளியும்,  நீலமணியால்
இருளும் பரப்பின என்று வருணித்தார். ‘நீல மாலைத், தஞ்சுடையஇருள்
தழைப்பத் தரளம் ஆங்கே தண்மதியின் நிலாக்காட்டப் பவளந் தன்னால்
செஞ்சுடர வெயில்விரிக்கும் அழகு’ என்ற திருமங்கையாழ்வார் வாக்கு
(3.4.4) இக்கற்பனைக்கு மூலம்போலும். 41

1440.ஆடல் மான் தேர்க் குழாம், அவனி காணிய,
வீடு எனும் உலகின் வீழ் விமானம் போன்றன;
ஓடை மாக் கட களிறு, உதய மால் வரை
தேட அருங் கதிரொடும் திரிவ போன்றவே.

     ஆடல் மான் - பல்விதமான செலவுகளினால் நடனம்  இடுவது
போன்ற  குதிரைகள்  பூட்டப்பெற்ற;  தேர்க் குழாம் - தேர்த் தொகுதிகள்;
அவனி காணிய -  மண்ணுலகினைக்காணும் பொருட்டு; வீடு எனும்
உலகின் வீழ் -
சுவர்க்கம் என்கின்ற உலகத்திருந்தும்இறங்கிய; விமானம்
போன்றன
- விமானத்தை ஒத்தன;  ஓடை மாக் கட களிறு - முகபடாம்
அணிந்த பெரிய மதம் உடைய யானைகள்;  உதய மால் வரை - பெரிய
உதயமலை; தேட அருங்கதிரொடும்- ஒப்புச் சொல்லுதற்கரிய
சூரியனோடும்; திரிவ போன்ற - நகர வீதிகளில் திரிவனவற்றை
ஒத்திருந்தன.

     வீதிகளில் குதிரை பூட்டிய தேர்களையும், முகபடாம் அணிந்த
யானைகளையும் விமானம் ஆகவும்,உதய மலையாகவும் வருணித்தார்.
ஐங்கதி உடையமையால் ஆடல்மான் என்றார். ஐந்து கதியாவன; மல்ல கதி,
மயூர கதி,  வியாக்கிர கதி,  வானர கதி,  இடப கதி என்பன.  பல்வேறு
வகையான ஓட்டங்களைஇங்கே ஆடல் என்றார். ‘ஏ’ காரம் ஈற்றசை.    42

1441.வளம் கெழு திரு நகர் - வைகும் வைகலும்,
பளிங்குடை நெடுஞ் சுவர் படுத்த பந்தியில்