(குறள் 230) என்பதை இங்குக் கருதுக. “இன்மை யுரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றாக்கால்.தன்மெய் துறப்பான் மலை” என்ற (கலி. 43: 26-27) கலித் தொகையும்இதுவே. 80 1479. | ‘சிந்தை என் செயத் திகைத்தனை? இனி, சில நாளில், தம்தம் இன்மையும், எளிமையும், நிற்கொண்டு தவிர்க்க, உந்தை, உன் ஐ, உன் கிளைஞர், மற்ற உன் குலத்து உள்ளோர், வந்து காண்பது உன் மாற்றவள் செல்வமோ? மதியாய்! |
‘மதியாய்! - அறிவுடையவளே!; என்செய - என்ன செய்யலாம் என்று கருதி;சிந்தை - (உன்) மனத்தில்; திகைத்தனை? - தடுமாற்றம் அடைந்தாய்; இனி- வருங்காலத்து; சில நாளில் - சில நாள்களில்; உந்தை - உன் தந்தை; உன் ஐ - உன் அண்ணன்; உன் கிளைஞர் - உன் பிறந்த வீட்டுக்கு உறவினர்கள்; மற்று - மேலும்; உன் குலத்து உள்ளோர் - உன் குலத்தைச் சேர்ந்தவர்கள் (ஆகியோர்); தம்தம் இன்மையும் - தங்கள் தங்களது வறுமையையும்; எளிமையையும் - தாழ்ச்சியையும்; நிற்கொண்டு - உன்னைக் கொண்டு; தவிர்க்க - போக்கிக் கொள்ளலாம் என்று; வந்து - இங்கே வந்து; காண்பது - (நீ அதற்கு முடியாமல் உள்ளபடியால்)பார்ப்பது; உன் மாற்றவள் செல்வமோ - உன் சக்களத்தியின் செல்வத்தையோ? 81 1480. | ‘காதல் உன் பெருங் கணவனை அஞ்சி, அக் கனி வாய்ச் சீதை தந்தை, உன் தாதையைத் தெறுகிலன்; இராமன் மாதுலன் அவன்; நுந்தைக்கு வாழ்வு இனி உண்டோ? பேதை! உன்துணை யார் உளர் பழிபடப் பிறந்தார்? |
‘பேதை! - அறிவில்லாதவளே!; காதல் உன் பெருங்கணவனை அஞ்சி - உன்மேல்அளவிறந்த அன்புடைய உன் உயரிய நாயகனான |