பக்கம் எண் :

மந்தரை சூழ்ச்சிப் படலம் 99

(குறள் 230) என்பதை இங்குக் கருதுக. “இன்மை  யுரைத்தார்க்கு அது
நிறைக்கல் ஆற்றாக்கால்.தன்மெய் துறப்பான் மலை” என்ற (கலி. 43: 26-27)
கலித் தொகையும்இதுவே.                                      80

1479.‘சிந்தை என் செயத் திகைத்தனை?
     இனி, சில நாளில்,
தம்தம் இன்மையும், எளிமையும்,
     நிற்கொண்டு தவிர்க்க,
உந்தை, உன் ஐ, உன் கிளைஞர், மற்ற
     உன் குலத்து உள்ளோர்,
வந்து காண்பது உன் மாற்றவள்
     செல்வமோ? மதியாய்!

     ‘மதியாய்! - அறிவுடையவளே!; என்செய - என்ன செய்யலாம் என்று
கருதி;சிந்தை - (உன்) மனத்தில்; திகைத்தனை? - தடுமாற்றம்
அடைந்தாய்; இனி- வருங்காலத்து; சில நாளில் - சில நாள்களில்;
உந்தை - உன் தந்தை; உன் ஐ - உன் அண்ணன்; உன் கிளைஞர் -
உன் பிறந்த வீட்டுக்கு உறவினர்கள்; மற்று - மேலும்;  உன் குலத்து
உள்ளோர் -
உன் குலத்தைச் சேர்ந்தவர்கள் (ஆகியோர்); தம்தம்
இன்மையும் -
தங்கள் தங்களது  வறுமையையும்; எளிமையையும் -
தாழ்ச்சியையும்; நிற்கொண்டு - உன்னைக் கொண்டு; தவிர்க்க - போக்கிக்
கொள்ளலாம் என்று; வந்து - இங்கே வந்து; காண்பது - (நீ அதற்கு
முடியாமல் உள்ளபடியால்)பார்ப்பது;  உன் மாற்றவள் செல்வமோ -
உன் சக்களத்தியின் செல்வத்தையோ?                          81

1480.‘காதல் உன் பெருங் கணவனை அஞ்சி,
     அக் கனி வாய்ச்
சீதை தந்தை, உன் தாதையைத்
     தெறுகிலன்; இராமன்
மாதுலன் அவன்; நுந்தைக்கு
     வாழ்வு இனி உண்டோ?
பேதை! உன்துணை யார் உளர்
     பழிபடப் பிறந்தார்?

     ‘பேதை! - அறிவில்லாதவளே!; காதல் உன் பெருங்கணவனை
அஞ்சி
- உன்மேல்அளவிறந்த அன்புடைய உன் உயரிய நாயகனான