சிறப்பை உணர்த்துவதாகும். ''ஆற்றலும் நிறைவும் கல்வி அமைதியும் அறிவும் என்னும், வேற்றுமை இவனோடு இல்லையாம்'' (3767) என்ற இராமன் கூற்றாலும் 'அறிவும் ஈதே, உரு ஈதே, ஆற்றல் ஈதே. . . . நீதி ஈதே நினக்கு' (5338) என்ற சீதா பிராட்டியின் சொற்களாலும் அனுமனின் நிறம் விளங்குதல் காண்க. நினைவும் கல்வியும் நீதியும் சூழ்ச்சியும் - எண்ணும்மை. சமீரணன் - காற்று. நன்றாகச் சஞ்சரிக்க வல்லவன் எனும் காரணம்பற்றி வந்த பெயர். சுக்கிரீவன் ஐயத்தைக் குறிப்பால் உணர்ந்த அனுமன் அவன் ஐயம் நீங்கச் சொல்லத் தொடங்கினான் என்க. தனயன் - எதுகை நோக்கித் தனையன் எனத் திரிந்தது. 72 3858. | 'உன்னினேன், உன்தன் உள்ளத்தின் உள்ளதை, உரவோய்! ''அன்ன வாலியைக் காலனுக்கு அளிப்பது ஓர் ஆற்றல் இன்ன வீரர்பால் இல்லை'' என்று அயிர்த்தனை; இனி, யான் சொன்ன கேட்டு, அவை கடைப்பிடிப்பாய்' எனச் சொன்னான். |
உரவோய் -வலிமை உடையவனே! உன்தன் உள்ளத்தின் - உன் மனத்தில்;உள்ளதை -உள்ள கருத்தை;உன்னினேன் -(யான்) ஊகித்து அறிந்து கொண்டேன்;அன்ன வாலியை -அத்தகைய வலிமை வாய்ந்த வாலியை;காலனுக்கு அளிப்பது ஓர் ஆற்றல் -யமனுக்குக் கொடுக்கும்படியான ஒப்பற்ற வலிமை;இன்ன வீரர்பால் இல்லை -இந்த வீரர்களிடத்தில் இல்லை;என்று அயிர்த்தனை -என்று ஐயம் கொண்டாய்; இனி யான் சொன்ன கேட்டு- இனி யான் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு;அவை கடைப்பிடிப்பாய் -அவற்றை உறுதியாகக் கொள்வாய்; எனச் சொன்னான் -என்று சொல்வானாயினன். உற்றது கொண்டு மேல்வந்து உறுபொருள் உணரவல்ல அனுமன் தன் அறிவால் சுக்கிரீவன் மனத்தில் கொண்ட ஐயத்தை உணர்ந்துகொண்டான். காலனுக்கு அளிப்பது - கொல்வது என்னும் பொருளைத் தருவது. அன்ன வாலி என்றது. எதிர்த்தார் வலிமையில் பாதியைத் தான் பெறுதற்குரிய வரம் பெற்ற வாலி என அவன் பெருமையைக் கூறியதாகும். இன்ன வீரர் - இங்கு வந்துள்ள இராமலக்குவரைக் குறிக்கும். யான் சொன்ன என்பதில் சொன்ன காலவழுவமைதி. 73 3859. | 'சங்கு சக்கரக் குறி உள, தடக் கையில், தாளில்; எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை; |
|