| முடியின்மேல் சென்ற முடியன ஆதலின், முடியா நெடிய மால் எனும் நிலையன; நீரிடைக் கிடந்த படியின்மேல் நின்ற மேரு மால் வரையினும், பரிய; |
அடியினால் -தன் திருவடியினால்;உலகு அளந்தவன் -உலகங் களை அளந்தவனான திருமாலின்;அண்டத்துக்கு அப்பால் -அண் டத்திற்கு அப்பால் உள்ள;முடியின் மேல் சென்ற -உச்சி முகட்டின் மேலாக வளர்ந்து சென்ற;முடியன ஆதலின் -உச்சியினை உடையன ஆதலால்;முடியா -அளவிட முடியாத;நெடிய மால் எனும் -(விக் கிரமாவதாரங் கொண்ட) நெடிய திருமால் என்று சொல்லத் தக்க;நிலையன- நிலைமையை உடையன. நீர் இடைக்கிடந்த -கடல் நீரில் கிடந்த - படியின் மேல் நின்ற-பூமியின் நடுவில் நிற்கின்ற;மேரு மால் வரையினும் -பெரிய மேருமலையைக் காட்டிலும்;பரிய - பருமையை உடையன. மரங்கள் திருமாலுக்குரிய உலகினையும் கடந்து வளர்ந்து இருந்தமையால், அவை திரிவிக்கிரமனாய் வளர்ந்த திருமாலை ஒத்து விளங்கின. திரிவிக்கிரமனின் பெருமையை 'படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று, அடிவட்டத்தால் அளப்ப நீண்ட - முடிவட்டம், ஆகாயம் ஊடறுத்து அண்டம் போய் நீண்டதே, மாகாயமாய் நின்ற மாற்கு' என்று பாடுவர் பேயாழ்வார் (மூன்றாந் திருவந்தாதி - 13) நீரிடைக் கிடந்தபடி - நீரிடத்தில் தோன்றிய பூமி என்பதன் பொருள். பூமியின் நடுவில் பொன்மயமாய் மேருமலை நிற்பதாகவும் சூரியன் உதயமும் மறைவும் அம்மலையால் ஏற்படுகின்றன என்றும் பௌராணிகர் உரைப்பர். அத்தகைய மேருமலையினும் பரிய எனக் கூறி மரங்களின் பருமை உணர்த்தப்பட்டது. 9 3874. | வள்ளல் இந்திரன் மைந்தற்கும், தம்பிக்கும் வயிர்த்த உள்ளமே என, ஒன்றின் ஒன்று உள் வயிர்ப்பு உடைய; தெள்ளு நீரிடைக் கிடந்த பார் சுமக்கின்ற சேடன் வெள்ளி வெண் படம் குடைந்து கீழ் போகிய வேர; |
வள்ளல் இந்திரன் மைந்தற்கும்-வள்ளலாகிய இந்திரன் மைந்தனான வாலிக்கும்;தம்பிக்கும் - அவன் தம்பி சுக்கிரீவனுக்கும்;வயிர்த்த உள்ளமே என -பகைமை முற்றிய மனம் போல;ஒன்றின் ஒன்று -அம்மரங்கள் ஒன்றைவிட மற்றொன்று;உள் வயிர்ப்பு உடைய -உள்ளே வயிரம் பாய்ந்தவை;தெள்ளு நீரிடைக் கிடந்த -தெளிவான நீரையுடைய கடலினிடையே தங்கிய;பார் சுமக்கின்ற - பூமி |