பக்கம் எண் :

மராமரப் படலம்123

 முடியின்மேல் சென்ற முடியன
     ஆதலின், முடியா
நெடிய மால் எனும்
     நிலையன; நீரிடைக் கிடந்த
படியின்மேல் நின்ற மேரு
     மால் வரையினும், பரிய;

     அடியினால் -தன் திருவடியினால்;உலகு அளந்தவன் -உலகங்
களை அளந்தவனான திருமாலின்;அண்டத்துக்கு அப்பால் -அண்
டத்திற்கு அப்பால் உள்ள;முடியின் மேல் சென்ற -உச்சி முகட்டின்
மேலாக வளர்ந்து சென்ற;முடியன ஆதலின் -உச்சியினை உடையன
ஆதலால்;முடியா -அளவிட முடியாத;நெடிய மால் எனும் -(விக்
கிரமாவதாரங் கொண்ட) நெடிய திருமால் என்று சொல்லத் தக்க;நிலையன-
நிலைமையை உடையன.  நீர் இடைக்கிடந்த -கடல் நீரில் கிடந்த -
படியின் மேல் நின்ற-
பூமியின் நடுவில் நிற்கின்ற;மேரு மால் வரையினும்
-
பெரிய மேருமலையைக் காட்டிலும்;பரிய - பருமையை உடையன.

     மரங்கள் திருமாலுக்குரிய உலகினையும் கடந்து வளர்ந்து
இருந்தமையால், அவை திரிவிக்கிரமனாய் வளர்ந்த திருமாலை ஒத்து
விளங்கின.  திரிவிக்கிரமனின் பெருமையை 'படிவட்டத் தாமரை பண்டுலகம்
நீரேற்று, அடிவட்டத்தால் அளப்ப நீண்ட - முடிவட்டம், ஆகாயம் ஊடறுத்து
அண்டம் போய் நீண்டதே, மாகாயமாய் நின்ற மாற்கு' என்று பாடுவர்
பேயாழ்வார் (மூன்றாந் திருவந்தாதி - 13) நீரிடைக் கிடந்தபடி - நீரிடத்தில்
தோன்றிய பூமி என்பதன் பொருள்.  பூமியின் நடுவில் பொன்மயமாய்
மேருமலை நிற்பதாகவும் சூரியன் உதயமும் மறைவும் அம்மலையால்
ஏற்படுகின்றன என்றும் பௌராணிகர் உரைப்பர்.  அத்தகைய
மேருமலையினும் பரிய எனக் கூறி மரங்களின் பருமை உணர்த்தப்பட்டது.  9

3874.வள்ளல் இந்திரன் மைந்தற்கும்,
     தம்பிக்கும் வயிர்த்த
உள்ளமே என, ஒன்றின் ஒன்று
     உள் வயிர்ப்பு உடைய;
தெள்ளு நீரிடைக் கிடந்த
     பார் சுமக்கின்ற சேடன்
வெள்ளி வெண் படம் குடைந்து
     கீழ் போகிய வேர;

     வள்ளல் இந்திரன் மைந்தற்கும்-வள்ளலாகிய இந்திரன் மைந்தனான
வாலிக்கும்;தம்பிக்கும் - அவன் தம்பி சுக்கிரீவனுக்கும்;வயிர்த்த உள்ளமே
என -
பகைமை முற்றிய மனம் போல;ஒன்றின் ஒன்று -அம்மரங்கள்
ஒன்றைவிட மற்றொன்று;உள் வயிர்ப்பு உடைய -உள்ளே வயிரம்
பாய்ந்தவை;தெள்ளு நீரிடைக் கிடந்த -தெளிவான நீரையுடைய
கடலினிடையே தங்கிய;பார் சுமக்கின்ற - பூமி