| மந்தரக் கிரி எனப் பெரியவன், மகர நீர் சிந்திட, கரு நிறத்து அரியினைத் தேடுவான். |
மீது இந்துவைத் தொட -மேலே (வானில்) உள்ள சந்திரனைத் தொடும்படியாக;நிமிர்ந்து எழு -மேலெழுந்து வளர்ந்துள்ள;மருப்பு இணையினான் -இரண்டு கொம்புகளை உடையவனும்;மந்தரக்கிரி எனப் பெரியவன் -மந்தர மலை போன்ற பெரிய உருவத்தை உடைய வனுமான; துந்துபிப் பெயருடை -துந்துபி என்னும் பெயருடைய;சுடு சினத்து அவுணன் -தீப்போல் சுடுகின்ற கோபத்தை உடைய அசுரன்;மகர நீர் சிந்திட -கடலில் உள்ள நீர் சிதறும் படியாக;கரு நிறத்து அரியினை - கரிய நிறத்தை உடைய திருமாலை;தேடுவான் -தேடிச் சென்றான். முன் பாடலில் 'மயிடமோ' என்றதாலும் இங்கு 'மருப்பிணையினான்' என்றதாலும் 'துந்துபி' எருமை வடிவினன் என்பது புலனாகும். 'மகரநீர் சிந்திட' என்றதால் கடலைக் கலக்கிக் கொண்டு தேடினான்' என்பது பெறப்படுகிறது. எருமையின் இயல்பிற்கேற்ப நீரைக் கலக்கினான் என அறியலாம். 3 3889. | 'அங்கு வந்து அரி எதிர்ந்து, ''அமைதி ஏன்? '' என்றலும், ''பொங்கு வெஞ் செருவினில் பொருதி'' என்று உரைசெய, ''கங்கையின் கணவன், அக் கறை மிடற்று இறைவனே உங்கள் வெங் கத வலிக்கு ஒருவன்'' என்று உரை செய்தான். |
அங்கு -அவ்விடத்தில்;அரி வந்து எதிர்ந்து -திருமால் எதிரில் வந்து;அமைதி என் என்றலும் -'நீ இங்கு வந்த காரணம் யாது' என்று வினவிய அளவில்;பொங்கு வெஞ் செருவினில் -சீற்றம் கொண்டு செய்கின்ற கொடிய போரில்;பொருதி என்று உரை செய் -'என்னோடு போர் செய்வாயாக என்று துந்துபி கூற;கங்கையின் கணவன் - (அதற்குத் திருமால்) 'கங்கா தேவியின் கணவனான;அக்கறை மிடற்று இறைவனை - நஞ்சுண்டதால் கறுத்த கண்டத்தை உடைய அந்தச் சிவபெருமானே;உங்கள் வெம்கதம் வலிக்கு -உங்ககளப் போன்றவர்களின் கோபமிக்க வலிமைக்கு; ஒருவன் - போரிடக்கூடிய ஒருவன் ஆவான';என்று உரை செய்தான் - என்று உரைத்தான். வாலியால் துந்துபி கொல்லப்படவேண்டும் என்பது ஊழ்வினையாதலால், திருமால் அவனொடு போர் செய்து கொல்லாது இங்ஙனம் கூறினார் எனக் |