கொள்க. கங்கையைச் சிவபிரான் தன் தலையில் கொண்டமையால் 'கங்கையின் கணவன்' எனப்பட்டான். இறைவனே ஏகாரம் பிரிநிலை. 4 3890. | 'கடிது சென்று, அவனும், அக் கடவுள்தன் கயிலையைக் கொடிய கொம்பினின் மடுத்து எழுதலும், குறுகி, ''முன் நொடுதி; நின் குறை என்?'' என்றலும், நுவன்றனன்அரோ, ''முடிவுஇல் வெஞ்செரு, எனக்கு அருள் செய்வான் முயல்க!'' எனா, |
அவனும் கடிது சென்று -அந்த அரக்கனும் விரைந்து சென்று; அக்கடவுள் தன் கயிலையைக் -அந்தச் சிவபிரானின் கைலை மலையை; கொடிய கொம்பினின் -தன் கொடிய கொம்புகளால்;மடுத்து எழுதலும் - முட்டிப் பாய்ந்து எழுகையில்;முன் குறுகி -(சிவபிரான்) அவன் எதிரில் வந்து; நின் குறை என் -''உனக்கு வேண்டுவது என்ன?நொடிதி - சொல்வாய்'';என்றலும் -என்று கேட்டதும்;எனக்கு - (துந்துபி) 'எனக்கு; முடிவுஇல் வெஞ் செரு -முடிவு இல்லாத கொடிய போரினை;அருள் செய்வான் முயல்க -அளிக்க முயல்வாயாக;எனா நுவன்றனன் - என்று சொன்னான். 'என்னோடு இடைவிடாது போர் செய்ய வேண்டும்'. என்று துந்துபி தான் வந்த காரணத்தைச் சிவபிரானிடம் அறிவித்தான். 5 3891. | ''மூலமே, வீரமே மூடினாயோடு, போர் ஏலுமே? தேவர்பால் ஏகு'' எனா, ஏவினான் - ''சால நாள் போர் செய்வாய் ஆதியேல், சாரல்; போர் வாலிபால் ஏகு'' எனா - வான் உளோர் வான் உளான். |
மூலமே -(அது கேட்ட சிவபிரான்) பண்டு தொட்டே;வீரமே மூடினாயோடு -வீரச் செயலிலேயே மூழ்கிக் கிடக்கும் உன்னோடு;போர் ஏலுமே -போரிடுவது முடியுமா? (முடியாது);தேவர் பால் ஏகு -(ஆதலால்) நீ தேவர்களிடம் போர் செய்யப் போவாயாக;எனா ஏவினான் -என்ற சொல்லி அனுப்பினான்;வான் உளோர் வான் உளான் -(அவனும் சென்று தேவர்களைப் போருக்கு அழைக்க) அந்தத் தேவலோகத்தில் உள்ள தேவர்களுக்குத் தலைவனான இந்திரன்; |