பக்கம் எண் :

துந்துபிப் படலம்137

சால நாள்-(துந்துபியிடம்) 'நீ நீண்டகாலம்;போர் செய்வாய் ஆதியேல்-
போர் செய்ய விரும்புவாயாயின்;சாரல் -இங்கு வராதே;போர் வாலி பால்
ஏகு -
போர் செய்வதில் வல்ல வாலியிடம் செல்வாய்;எனா -என்று. . . .

     எனா என்பது அடுத்த பாடலில் 'விட' என்பதோடு முடியும்.  ஏலுமே -
ஏகாரம் எதிர்மறை.  சிவபிரான் துந்துபியைத் தேவர்களிடம் அனுப்பப் தேவர்
தலைவனாம் இந்திரன் அவனை வாலியிடம் அனுப்பிவைத்தான்.                                              6

3892.'அன்னவன் விட, உவந்து  அவனும்
     வந்து, ''அரிகள்தம்
மன்னவன்! வருக! போர்
     செய்க!'' எனா, மலையினைச்
சின்ன பின்னம் படுத்திடுதலும்,
     சினவி, என்
முன்னவன், முன்னர் வந்து
     அனையவன் முனைதலும்,

     அன்னவன் விட -அத்தேவேந்திரன் அனுப்பிவிட;அவனும் உவந்து
வந்து -
அந்தத் துந்துபியும் மகிழ்ந்து கிட்கிந்தைக்கு வந்து;அரிகள் தம்
மன்னவன் -
குரங்குகளுககு அரசனே!வருக போர் செய்க -வந்து
என்னோடு போர் செய்வாயாக;எனா -என்று சொல்லிக் கொண்டு;
மலையினை -
அம்மலையை;சின்ன பின்னம் படுத்திடுதலும் -பலவாறு
நாசப்படுத்துகையில்;என் முன்னவன் சினவி -என் தமையனான வாலி
சினங் கொண்டு;முன்னர் வந்து -எதிரில் வந்து;அனையவன் முனைதலும்
-
அந்த அசுரனோடு போர் செய்த அள

வில். . . .

     'முனைதலும்' என்பது அடுத்த பாடலில் வரும் 'உணர்ந்திலர்'
என்பதனோடு முடியும் அன்னவன் - அகரச்சுட்டு அடியாக வந்த சொல்.
தேவேந்திரன் சொற்படியே துந்துபி வாலியிடம் சென்று போருக்கு அழைக்க
இருவரும் போர் புரியலாயினர் என்பதாம்.                           7

3893.'இருவரும் திரிவுறும் பொழுதின்
     இன்னவர்கள் என்று
ஒருவரும் சிறிது
     உணர்ந்திலர்கள்
;எவ்உலகினும்,
வெருவரும் தகைவுஇலர், விழுவர்,
     நின்று எழுவரால்;
மருவஅருந்தகையர்,
     தானவர்கள் வானவர்கள்தாம்.