பக்கம் எண் :

138கிட்கிந்தா காண்டம்

     இருவரும்-வாலி, துந்துபி ஆகிய இருவரும்;திரிவுறும் பொழுதின் -
இடசாரி, வலசாரியாகச் சுழலும் போதில்;இன்னவர்கள் என்று- இவர்கள்
இன்னார் என்று;ஒருவரும் சிறிது உணர்ந்திலர்கள் -எவரும்சிறிதும்
அறிந்திலர்;எவ் உலகினும் -எந்த உலகிலும்;வெருவரும் தகைவு இலர் -
(எவரைக் கண்டும்) அஞ்சும் தன்மையில்லாத இவர்கள்;விழுவர் -கீழே
விழுவார்கள்;நின்று எழுவர் -(மீண்டும்) எழுந்து நிற்பார்கள்;தானவர் -
அசுரர்களும்;வானவர்கள் தாம் -தேவர்களும்;மருவ அருந்தகையர் -
அருகே நெருங்கவும் முடியாத தன்மையினர் ஆயினர்.

     இன்னவர்கள் என்று சிறிதும் உணர்ந்திலர்கள் - இவன் தான் வாலி,
என்றும் இவன் தான் துந்துபி என்றும் அறிய முடியாமையை உணர்த்திற்று.
அவ்விருவரின் உருவத்தின் பெருமையாலும் போரிடும் வேகத்தாலும் இட,
வலமாகச் சுழல்வதாலும் அடையாளம் தெரிந்திலது.  உணர்ந்திலர்கள் - விகுதி
மேல் விகுதி (அர், கள்).  துந்துபியின் இனத்தவர் ஆதலின் 'தானவர்'
முன்னர்க் கூறப்பட்டனர்.                                         8

3894.'தீ எழுந்தது, விசும்புற;
     நெடுந் திசை எலாம்
போய் எழுந்தது, முழக்கு;
     உடன் எழுந்தது, புகை;
தோய நன் புணரியும்,
     தொடர் தடங் கிரிகளும்,
சாய் அழிந்தன; -
     அடித்தலம் எடுத்திடுதலால்.

     அடித்தலம் எடுத்திடுதலால் -  (அவர்கள்) கால்களைத் தூக்கி
வைத்ததால்;தீ விசும்புற எழுந்தது -நெருப்பு வானத்தை அடையுமாறு
மேலெழுந்தது; முழக்கு -(அவர்கள் செய்த) ஆரவாரம்;நெடுந்திசை எலாம்
போய் -
நீண்ட திசைகளெங்கும் சென்று;எழுந்தது -ஒலித்தது;புகை -
(அந்நெருப்பின்) புகையும்;உடன் எழுந்தது -கூடவே பரவிற்று;தோய நல்
புணரியும் -
நீரினை உடைய நல்ல கடலும்;தொடர் தடங்கிரிகளும்-
பெரிய மலைத் தொடர்களும்;சாய் அழிந்தன -அழகு கெட்டன.

     தீ - அடிகள் படுவதால் ஏற்படும் உராய்வில் நிலத்தினின்று எழுந்தது.
கடலும் மலையும் தன் நிலை கெட்டன என்பதால் போரின் கடுமை புலனாகும்.
தோயம் - நீர்.  'எழுந்தது' என்ற சொல் ஒரே பொருளில் பலமுறை வந்ததால்
இப்பாடல் சொற்பொருள்பின் வருநிலையணிஅமைந்தது.                9

3895.'அற்றது ஆகிய செருப்
     புரிவுறும் அளவினில்,
கொற்ற வாலியும், அவன்,
     குலவு தோள் வலியொடும்