பக்கம் எண் :

184கிட்கிந்தா காண்டம்

     கொற்றவ - (தாரை வாலியை நோக்கி) வெற்றியை உடைய அரசனே!
நின்பெருங் குவவுத் தோள் -
உன்னுடைய பெருமை மிக்க திரண்ட
தோள்களின்;வலிக்கு - வலிமைக்கு;முன்னைநாள் -முன்;இற்றனன் -
வலிமை அழிந்து;ஈடு உண்டு ஏகினான் -வருத்தமுற்றுச் சென்றவனான
சுக்கீவன்;பெருந்திறல் பெற்றிலன் -(நின்னை எதிர்த்துப் போர் செய்ய)
பேராற்றலைப் புதிதாகப் பெற்றானில்லை;பெயர்த்தும் போர்செயற்கு -
(அவ்வாறாக) மீண்டும் உன்னோடு போர்செய்வதற்கு;உற்றது -வந்துற்றமை;
நெடுந்துணை உடைமையால்
- பெரிய ஒரு துணையினைப்
பெற்றமையாலாகும்;என்றாள் -என்று சொன்னாள்.

     நாட்டையும் ஆளும் தகுதியும் திறலும் உடையவனாதலின் தாரை
வாலியைக் 'கொற்றவ' என விளித்தாள்.  குவவு - திரட்சி; ஈடு உண்டு -
வருத்தமுற்று. ஈடு - வருத்தம்.  'ஈடினால் இருந்தெண்ணி' என்பது சிந்தாமணி
(1762).  நெடுந்துணை - துன்பம் மிக்க காலத்திலும் நீங்காது நெடிது நின்று
உதவும் துணை; ஈண்டு இராமனைக் குறிக்கும்.  பெயர்த்தும் போர்செயற்கு
உற்ற காரணத்தை ஊகித்தறியும் தாரையின் அறிவுத்திறன் ஈண்டு
நோக்கத்தக்கது.                                                24

3959.'மூன்று என முற்றிய முடிவு
      இல் பேர் உலகு
ஏன்று, உடன் உற்றன,
      எனக்கு நேர் எனத்
தோன்றினும், தோற்று, அவை
      தொலையும் என்றலின்
சான்று உள; அன்னவை -
     தையல்! - கேட்டியால்:

     தையல் -(அதற்கு வாலி) பெண்ணே! மூன்று என முற்றிய -மேல்,
கீழ், நடு என மூன்றாக வகுக்கப்பெற்றுள்ள;முடிவு இல் பேர் உலகு -
எல்லையற்ற பெரிய உலகங்கள் யாவும்;ஏன்று உடன் உற்றன -தம்முள்
இயைந்து ஒன்று சேர்ந்தனவாய்;எனக்கு நேர் என -எனக்குப் பகையாக;
தோன்றினும் -
எதிர்த்து வந்து தோன்றினாலும்;அவை
தோற்றுத்தொலையும் -
அவையெல்லாம்தோற்று அழியும்;என்றலின் -
என்று கூறுவதற்கு;சான்று உள -சான்றுகள் பல உள்ளன;அன்னவை -
அவற்றை;கேட்டி -கேட்பாயாக!

     தையல் - அழகுடையவள்; அண்மை விளி, உலகு - இடவாகுபெயரால்
அங்குள்ள உயிர்களைக் குறித்தது.  கேட்டி - முன்னிலை ஒருமை; ஆல்
அசை வாலியின் போர்ச்செயலைக் கண்டு அறியும் வாய்ப்பில்லாதவளாய்
கேள்வி மாத்திரத்தால் அறிந்தவளாதலின் 'கேட்டி' என வாலி
உரைக்கலாயினன்.                                             25

3960. 'மந்தர நெடு வரை
     மத்து, வாசுகி