பக்கம் எண் :

வாலி வதைப் படலம் 207

மலையிலுள்ள குகை என்னும்படி; தொளைப்பர் -அழமாகத் துளைப்பார்கள்.

     எறிந்தென - எறிந்தது + என; இது தொகுத்தல் விகாரம் உகிருக்கு வேல்
உவமை.                                                       57

3992.மண்ணகத்தன மலைகளும்,
      மரங்களும், மற்றும்
கண்ணகத்தினில் தோன்றிய
      யாவையும், கையால்,
எண் நகப் பறித்து
      எறிதலின், எற்றலின், இற்ற,
விண்ணகத்தினை மறைத்தன; மறி
      கடல் வீழ்ந்த.

     மண்ணகத்தன மலைகளும்- நிலத்தில் இருப்பனவாகிய மலை
களையும்;மரங்களும் -மரங்களையும்;மற்றும் கண்ணகத்தில் தோன்றிய -
மேலும் கண்களில் பட்ட;யாவையும் -எல்லாப் பொருள்களையும்;கையால்-
(அவர்கள்) தத்தம் கைகளால்;எண் நகப் பறித்து எறிதலின் -வலிமை
விளங்கப் பெயர்த்தெடுத்து வீசி எறிந்ததனாலும்;எற்றலின் -(அவற்றால்)
தாக்கியதாலும்;இற்ற -(அம்மலை முதலியன) முறிந்தவனாய்;
விண்ணகத்தினை மறைத்தன-
விசும்பிடத்தை மறைத்தன;மறிகடல் வீழ்ந்த-
மேலும் மடங்கி விழும் அலைகளை உடைய கடலில் அவை வீழ்ந்தன.

     எண் - ஈண்டு உள்ளத்தின் திண்மையைக் குறித்து நின்றது.  பறித்தல் -
வேருடன் பெயர்த்தெடுத்தல்.  வானமெங்கும் பரவி நிறைதலால்
'விண்ணகத்தினை மறைத்தன' என்றார்.  'மண்ணகத்தன' என்பதை
மரங்களுக்கும் இயைக்கலாம்.  கண் அகத்தில் - கண் முன்னிலையில்
என்றபடி.                                                     58

3993.வெருவிச் சாய்ந்தனர், விண்ணவர்;
      வேறு என்னை விளம்பல்?
ஒருவர்க்கு ஆண்டு அமர்,
      ஒருவரும் தோற்றிலர்; உடன்று
செருவில் தேய்த்தலின், செங் கனல்
      வெண் மயிர்ச் செல்ல,
முரி புல் கானிடை எரி
      பரந்தன என முனைவர்.

     ஆண்டு அமர் -அப்பொழுது நடந்த போரில்;ஒருவர்க்கு ஒருவரும்
தோற்றிலர் -
ஒருவர் மற்றொருவர்க்குத் தோல்வி அடையாதவராய்;உடன்று
செருவில் தேய்த்தலின் -
கடுமையாக எதிர்த்துப்