பக்கம் எண் :

420கிட்கிந்தா காண்டம்

 கொன்று நீக்குதல்
     குற்றத்தில் தங்குமோ?
சென்று, மற்று அவன்
      சிந்தையைத் தேர்குவாய்.

     நன்றிகொன்று -(இப்படி) ஒருவன் தனக்குச் செய்த நன்றியைச்
சிதைந்து;அருநட்பினை நார் அறுத்து -பெறுவதற்கு அருமையான நட்பாம்
அன்புக்கயிறுஅற அழித்து;ஒன்றும் மெய்ம்மை -(எல்லோர்க் கும்)
ஏற்றதாகப் பொருந்தி நிற்கும் வாய்மையை;சிதைத்து -குலைத் துவிட்டு;
உரைபொய்த்துளான் -
வாக்குத் தவறியவனை;கொன்று நீக்குதல் -
கொன்று ஒழிப்பது;குற்றத்தின் நீங்கும் ஆல் -பழிபாவங் களிலிருந்து
நீங்கிய செயலேயாகும் (ஆகவே);சென்று அவன் சிந்தையை -நீ அங்கே
சென்று அச்சுக்கிரீவனது மன நிலையை;தேர்குவாய் -ஆராய்ந்து அறிந்து
வருவாய்;

     'நட்பு நாரற்றன' - (நாலடி. 12) 'நலத்தின்கண் நாரின்மை' - (குறள் 958)
நார் - கயிறு அன்புப் பிணைப்பை உணர்த்திற்று.  ஒருவன் செய்த நன்றியை
மறந்தவனைக் கொன்றாலும் பழிபாவமில்லை; ஆதலால், அச்சுக்கிரீவனது
உண்மையான மனத்தை அறிந்து வருமாறு இலக்குவனிடம் இராமன் கூறினான்
என்பது.                                                        3

4272.'  ''வெம்பு கண்டகர் விண்
      புக வேர் அறுத்து,
இம்பர் நல் அறம்
      செய்ய எடுத்த விற்
கொம்பும் உண்டு; அருங்
      கூற்றமும் உண்டு; உங்கள்
அம்பும் உண்டு'' என்று
      சொல்லு, நம் ஆணையே.

     வெம்புகண்டகர் -மனம் கொதிக்கும் கொடியவர்கள்;விண்புக வேர்
அறுத்து -
(போரில் மடிந்து) வீர சொர்க்கம் அடையும்படி (அவர்களை)
வேரொடு அழித்து;இம்பர் நல்லறம் செய்ய -இவ்வுலகில் முறையான
தருமத்தை நிலைநிறுத்தும் பொருட்டு;எடுத்த விற்கொம்பும் -(நாம்) கையில்
ஏந்திய வில் தடியும்;உண்டு -(நம்மிடம்) உள்ளது;அருங்கூற்றமும்
உண்டு-
(யாராலும் தடுக்கமுடியாத) இயமனும் இருக்கிறான்;உங்கள் அம்பும்
உண்டு-
(வானரங்களாகிய) உங்களைக் கொல்லக் கூடிய வாலியைக் கொன்ற
அம்பும்(எம்மிடம்) இருக்கின்றது;என்று நம் ஆணை -என்று நமது
கட்டளையாக;சொல்லு -(சுக்கிரீவனிடம்) சொல்வாய்.

     விராதன் முதலான அரக்கர்களையும் வாலியையும் கொன்ற வில்லும்
அம்பும் கொண்டே சுக்கிரீவனையும், அவனுடைய வானரப் படைகளையும்
இயமனுக்கு