| கொன்று நீக்குதல் குற்றத்தில் தங்குமோ? சென்று, மற்று அவன் சிந்தையைத் தேர்குவாய். |
நன்றிகொன்று -(இப்படி) ஒருவன் தனக்குச் செய்த நன்றியைச் சிதைந்து;அருநட்பினை நார் அறுத்து -பெறுவதற்கு அருமையான நட்பாம் அன்புக்கயிறுஅற அழித்து;ஒன்றும் மெய்ம்மை -(எல்லோர்க் கும்) ஏற்றதாகப் பொருந்தி நிற்கும் வாய்மையை;சிதைத்து -குலைத் துவிட்டு; உரைபொய்த்துளான் -வாக்குத் தவறியவனை;கொன்று நீக்குதல் - கொன்று ஒழிப்பது;குற்றத்தின் நீங்கும் ஆல் -பழிபாவங் களிலிருந்து நீங்கிய செயலேயாகும் (ஆகவே);சென்று அவன் சிந்தையை -நீ அங்கே சென்று அச்சுக்கிரீவனது மன நிலையை;தேர்குவாய் -ஆராய்ந்து அறிந்து வருவாய்; 'நட்பு நாரற்றன' - (நாலடி. 12) 'நலத்தின்கண் நாரின்மை' - (குறள் 958) நார் - கயிறு அன்புப் பிணைப்பை உணர்த்திற்று. ஒருவன் செய்த நன்றியை மறந்தவனைக் கொன்றாலும் பழிபாவமில்லை; ஆதலால், அச்சுக்கிரீவனது உண்மையான மனத்தை அறிந்து வருமாறு இலக்குவனிடம் இராமன் கூறினான் என்பது. 3 4272. | ' ''வெம்பு கண்டகர் விண் புக வேர் அறுத்து, இம்பர் நல் அறம் செய்ய எடுத்த விற் கொம்பும் உண்டு; அருங் கூற்றமும் உண்டு; உங்கள் அம்பும் உண்டு'' என்று சொல்லு, நம் ஆணையே. |
வெம்புகண்டகர் -மனம் கொதிக்கும் கொடியவர்கள்;விண்புக வேர் அறுத்து -(போரில் மடிந்து) வீர சொர்க்கம் அடையும்படி (அவர்களை) வேரொடு அழித்து;இம்பர் நல்லறம் செய்ய -இவ்வுலகில் முறையான தருமத்தை நிலைநிறுத்தும் பொருட்டு;எடுத்த விற்கொம்பும் -(நாம்) கையில் ஏந்திய வில் தடியும்;உண்டு -(நம்மிடம்) உள்ளது;அருங்கூற்றமும் உண்டு-(யாராலும் தடுக்கமுடியாத) இயமனும் இருக்கிறான்;உங்கள் அம்பும் உண்டு-(வானரங்களாகிய) உங்களைக் கொல்லக் கூடிய வாலியைக் கொன்ற அம்பும்(எம்மிடம்) இருக்கின்றது;என்று நம் ஆணை -என்று நமது கட்டளையாக;சொல்லு -(சுக்கிரீவனிடம்) சொல்வாய். விராதன் முதலான அரக்கர்களையும் வாலியையும் கொன்ற வில்லும் அம்பும் கொண்டே சுக்கிரீவனையும், அவனுடைய வானரப் படைகளையும் இயமனுக்கு |