பக்கம் எண் :

கிட்கிந்தைப் படலம் 421

இரையாக்க முடியுமென்பதைச் சொல்லுமாறு இலக்குவனிடம் இராமன்
உரைத்தான் என்பது.  கண்டகர் - தீயோர். தீயோரை ஒறுத்து நல்லறம்
நாட்டுதல் ஆகிய அவதாரப்பாங்கு இங்கே புலப்படுவது காண்க.         4

4273. 'நஞ்சம் அன்னவரை நலிந்தால், அது
வஞ்சம் அன்று; மனு வழக்கு ஆதலால்,
அஞ்சில், ஐம்பதில், ஒன்று அறியாதவன்
நெஞ்சில் நின்று நிலாவ, நிறுத்துவாய்.

     நஞ்சம் அன்னவரை -நஞ்சு போன்ற கொடியவர்களை;நலிந்தால்
அது வஞ்சமன்று -
தண்டித்தால் அது கொடுமையாகாது;மனு வழக்கு
ஆதலால் -
(அவ்வாறு நலிவது) மனு தர்மத்தில் கூறப்பட்டுள்ள நீதியாதலால்;
(இதை);  அஞ்சில் ஐம்பதில் -ஐந்து வயதிலும் ஐம்பது வயதிலும்;ஒன்று
அறியாதவன் -
தக்கது தகாதது என்பதனை அறி யாதவனான அச்
சுக்கிரீவனது;நெஞ்சில் நின்று நிலாவ -மனத்தில் நன்றாகப் பதிந்து
விளங்கும்படி;நிறுத்துவாய் -(சொல்லி) நிலை நிறுத்துவாய்.

     கொடியவரைக் கொல்லாவிட்டால் உலகம் பலவாறு நலிவுபட்டு வருந்தும்;
ஆதலால், நல்லவர்களைப் பாதுகாத்தற்பொருட்டுத் தீயவரை அழித்தல் தருமச்
செயலாம் என்பது.  அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவன் - அஞ்சிலும்
(வயது) ஒன்று அறியாதவன்; ஐம்பதிலும் ஒன்று அறியாதவன்; அதாவது
இளமையிலும் முதுமையிலும் செய்வது அறியாதவன்.  'ஆறிலறியார் நூறிலும்
அறியார்'; 'தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டில்' என்னும் பழமொழிகள் இங்கு
நினைக்கத் தக்கன.  உலக வழக்கு நவிற்சி அணி. அஞ்சு -போலி.        5

4274.'  ''ஊரும், ஆளும், அரசும், உம் சுற்றமும்,
நீரும் ஆளுதிரேஎனின், நேர்ந்த நாள்
வாரும்; வாரலிர் ஆம் எனின், வானரப்
பேரும் மாளும்'' எனும் பொருள் பேசுவாய்.

     ஊரும் ஆளும் -(உங்கள்) நகரமான கிட்கிந்தையையும், குடி மக்
களையும்;அரசும் உம் சுற்றமும் -அரசாட்சியையும் உங்களது
உறவினர்களையும்;நீரும் ஆளுதிரே எனின் -நீங்களே அள விரும்பினால்;
நேர்ந்த நாள் -
(சீதையைத்) தேடுவதற்காக வர ஒப்புக்கொண்ட இக்
கார்த்திகை மாதத்தில்;வாரும் -(உடனே புறப்பட்டு) வர வேண்டும்;வாரலிர்
எனின் -
(அவ்வாறு) வராமல் போவீரானால்;வானரம் பேரும் மாளும் -
வானரம் என்னும் பெயரும் (இவ்வுலகில்) இல்லாது ஒழியும்;எனும் பொருள்
பேசுவாய் -
 என்னும் உண்மையை (சுக்கிரீவன்) முதலானவரிடம் நீ
உணர்த்துவாய்.

     நீரும் - உம் இசை நிறை: அசை நிலையுமாம்.                     6

4275.' ''இன்னும் நாடுதும், இங்கு இவர்க்கு வலி
துன்னினாரை'' எனத் துணிந்தார்எனின்,