| உன்னை வெல்ல, உலகு ஒரு மூன்றினும், நின் அலால் பிறர் இன்மை நிகழ்த்துவாய். |
இன்னும் இங்கு இவர்க்கும் -இனி வேறாக இப்போது இராம லக்குவராகிய இவர்களைக் காட்டிலும்;வலி துன்னினாரை நாடுதும் - வலிமையுள்ளவரை நாடித் துணையாகக் கொள்வோம்;எனத் துணிந் தார் எனின் -என்று (அச்சுக்கிரீவன் முதலோர்) முடிவெடுத்தார் களென்றால்; உன்னைவெல்ல -உன்னை வெல்வதற்கு;உலகு ஒரு மூன்றினும் -மூன்ற உலகங்களிலும்;நின் அலால் பிறர் இன்மை -உன்னையல்லாமல் வேறு யாரும் இல்லாமையை;நிகழ்த்துவாய் -அவர்களுக்கு (எடுத்துச்) சொல்வாய். பிறரால் வெல்ல முடியாத பேராற்றலோடு வேண்டுங்காலத்துத் தன்னைத் தானே அடக்கிக் கொள்ளும் வல்லமை மிக்கவன் இலக்குவன் என்பது, 'நின்ன லால் பிறரின்மை' எனவே உவமை நீக்கிய தோன்றல் இலக்குவன் என்பது. 7 4276. | 'நீதி ஆதி நிகழ்த்தினை, நின்று, அது, வேதியாத பொழுது, வெகுண்டு, அவண் சாதியாது, அவர் சொல் தரத் தக்கனை; போதி ஆதி' என்றான் - புகழ்ப் பூணினான். |
நின்று நீதி ஆதி -(கோபக்குறி காட்டாமல்) சாந்தமாக இருந்து நீ சொல்வது அரச நீதி முதலான அறங்கள் என்று தோன்றுமாறு;நிகழ்த்தினை -எடுத்துச்சொல்லி;அது வேதியாதபொழுது -அந் நீதி யுரையானது (அவர்களின் மன மாறுபாட்டை) மாற்றாத பொழுது;வெகுண்டு அவண் சாதியாது -நீ கோபித்து அந்த இடத்தில் (அப்போதே அவர்களை) அழிக்காமல்;அவர்சொல் -அவர்கள் கூறும் சொற்களை;தரத் தக்கனை - (என்னிடம்) வந்து சொல்லக் கடமைப் பட்டுள்ளாய்;போதி ஆதி என்றான் - (நீ) செல்க என்று சொல்லி விடை தந்தான்;புகழ்ப் பூணினான் -புகழையே தனக்கு அணிகலனாகக் கொண்ட இராமன். 'புகழ்ப் பூணினான் - புகழைப் பூண்' என்று கூறியமையின் இராமனைப் பொறுத்தமட்டில் இவ்வுலகோர் கூறும் புகழ்ச்சிகள் இன்றியும் தனக்குத்தானே உவமையாக விளங்குபவன் என்பதாம். பிறருக்குப் புகழாகிய பூண் அவர்கள் சிறப்பை மிகுதிப்படுத்தும். இராமனைப் பொறுத்தமட்டில் அவனை அடைந்ததால் அப்பூண் (புகழ்) தான் சிறப்பெய்தியது. இயல்பாகவே, சினம்பொங்கும் தன்மையுள்ள இலக்குவன் மாறுபட்ட செயல் செய்யாதவாறு இராமன் இவ்வாறு கட்டளையிட்டான் என்பது. 8 இலக்குவன் கிட்கிந்தை செல்லுதல் 4277. | ஆணை சூடி, அடி தொழுது, ஆண்டு, இறை பாணியாது, படர் வெரிந் பாழ்படாத் |
|