பக்கம் எண் :

424கிட்கிந்தா காண்டம்

     ஒண்நிறக் கழல் சேவடி -ஒளிமிக்க நிறமுள்ள வீரக்கழலை யணிந்த
(இலக்குவனின்) பாதங்கள்;ஊன்றலால் -அழுந்துவதால்;விண்உறத்தொடர்
-
வானுலகத்தைத் தொடுமாறு வளர்ந்துள்ள;மேரு வின் சீர்வரை -
மேருமலையின்(உயரத்தின்) எல்லையளவாக;மாதிரம் மண்உற -மலைகள்
நிலத்திலே பொருந்த;புக்கு அழுந்தின -உள்ளே சென்று அழுந்தின;
(அப்பொழுது)கட்செவி கண்உற -(பூமியைத் தாங்கும்) ஆதிசேடனாகிய
பாம்பு கண்களுக்கு;தெரிவுற்றது -புலனாயிற்று.

     கட்செவி - பாம்பு; இங்கே ஆதிசேடனைக் குறித்தது.  உயர்வு
நவிற்சியணி.                                               11

4280.வெம்பு கானிடைப்
      போகின்ற வேகத்தால்,
உம்பர் தோறும் மராமரத்து
      ஊடு செல்
அம்பு போன்றனன், அன்று -
     அடல் வாலிதன்
தம்பிமேல் செலும்
      மானவன் தம்பியே.

     அன்று -அப்பொழுது;அடல் வாலியின் -வலிமையுள்ள வாலியின்;
தம்பிமேல் செலும் -
தம்பியான சுக்கிரீவனிடம் செல்லுகின்ற;மானவன்
தம்பி -
மனுகுலத் தோன்றலாகிய இராமன் தம்பியான இலக்குவன்;வெம்பு
கானிடை -
வெப்பம் மிகுந்த காட்டிலே;போகின்ற வேகத்தால் -செல்லும்
வேகத்தினால்;உம்பர் தோயும் -வானத்தை அளாவி நின்ற;மராமரத்து
ஊடு செல் -
ஏழு மராமரங்களின் இடையே துளைத்துச் சென்ற;அம்பு
போன்றனன் -
(இராம) பாணத்தை ஒத்திருந்தான்.

     இராம பாணம் ஏழு மராமரங்களைத் துளைத்துச் சென்றதுபோல,
இலக்குவன் தான் செல்லும் காட்டு வழியிலுள்ள மரங்களை அழித்துச்
சென்றான் என்றபடி.  உவமையணி, உம்பர் தோயும் மராமரம் - உயர்வு
நவிற்சி.                                                     12

4281.மாடு வென்றி ஓர் மாதிர யானையின்
சேடு சென்று கெடில், ஒரு திக்கின் மா
நாடுகின்றதும், நண்ணிய கால் பிடித்து
ஓடுகின்றதும், ஒத்துளன் ஆயினான்.

     ஒரு திக்கின் மா -ஒரு திசை யானை;மாடு வென்றி -பக்கத்தி
லுள்ள வெற்றி பொருந்திய;ஓர் மாதிர யானையின் -மற்றொரு திசை
யானையினுடைய;சேடு சென்று -இளங்கன்று விலகிச் சென்று;கெடில் -
வழி தவறிச் சென்று விட்டால்;நாடுகின்றதும் - (அதைத்)