பக்கம் எண் :

426கிட்கிந்தா காண்டம்

விரைந்து சென்று;சேண் உயர் கிட்கிந்தை -மிக உயர்ந்த கிட்கிந்தை
மலையை;சேர்ந்தவன் -அடைந்தவனான இலக்குவன்;குன்றினின்று -ஒரு
மலையிலிருந்து;ஒரு குன்றினில் குப்புறும் -மற்றொரு மலையில் தாவிப்
பாய்கின்ற;பொன்துளங்கு -பொன்னிறத்தோடு விளங்கும்;உளைச் சீயமும்
-
பிடரி மயிரினையுடைய ஆண் சிங்கத்தையும்; போன்றனன் -ஒத்து
விளங்கினான்.

     வலிமையிலும், பெருமித நடையிலும் தோற்றத்திலும் சிங்கம்
இலக்குவனுக்கு உவமையாகும்.  தட்டுத்தடங்கல் இல்லாமல் குறித்த இடத்திற்கு
விரைந்து சென்று சேர்வதால் இலக்குவனுக்கு இராமபாணம் உவமையாயிற்று.
குப்புறுதல் - குதித்தல். சேண் உயர் - ஒரு பொருட்பன்மொழி.          15

வானரர் அங்கதனுக்குச் செய்தி அறிவித்தல்

4284. கண்ட வானரம்
      காலனைக் கண்டபோல்
மண்டி ஓடின; வாலி
      மகற்கு, 'அமர்
கொண்ட சீற்றத்து
      இளையோன் குறுகினான்,
சண்ட வேகத்தினால்'
      என்று, சாற்றலும்,

     கண்ட வானரம் -(கோபத்தோடு இலக்குன் வருவதைப்) பார்த்த
வானரங்கள்;காலனைக் கண்டபோல் -இயமனைக் கண்டது போல (அச்சம்
கொண்டு);வாலி மகற்கு -வாலி மைந்தனான அங்கதன் இருப்பிடம் நோக்கி;
மண்டி ஓடினர் -
நெருக்கி்க் கொண்டு ஓடி;அமர் கொண்ட சீற்றத்து -
போரினை மனங்கொண்ட கோபத்துடன்;இளையோன் சண்ட வேகத்தினால்
- இராமன் தம்பியான இலக்குவன் உக்கிரமான வேகத்தோடு;குறுகினான் -
வந்து சேர்ந்துள்ளான்;என்று சாற்றலும் -என்று சொன்ன அளவில்.

     கோபம் கொண்டவனாக மோதவரும் இலக்குவன் காணப்பட்டதால்
அவன் 'அமர்கொண்ட சீற்றத்து இளையோன்' எனப்பட்டான்.
மண்டியோடுதல் - ஒன்றன்மேல் ஒன்றாக விழுந்தடித்துக்கொண்டு ஓடுதல்.  16

அங்கதன் சுக்கிரீவனிடத்திற்கு போதல்

4285. அன்ன தோன்றலும், ஆண்
      தொழிலான் வரவு
இன்னது என்று அறிவான்,
      மருங்கு எய்தினான்;
மன்னன் மைந்தன் மனக்
      கருத்து உட் கொளா,