பக்கம் எண் :

கிட்கிந்தைப் படலம் 489

மின்னின மணியினின் -ஒளிவிடுகின்ற மணிகளினாலும்;பளிங்கின்
வெள்ளியின் -
படிகக் கற்களாலும் வெள்ளியினாலும்;பின்னின சிவிகை -
செய்யப்பட்டவனாகிய பல்லக்குகள்;விசும்பினும் பெரிய -ஆகாயத்தைவிட
மிக விரிந்தனவாய்;பெட்புறத் துன்னின -யாவரும் விரும்பும்படி
நெருங்கிவந்தன;வெண் கவிகை -வெண்கொற்றக் குடைகள்;சுற்றின -
சுழன்று வந்துன.

     குடைகள், அகன்ற ஆகாயம் முழுவதையும் மறைத்தலால் 'விசும்பினும்
பெரிய' என்றார்.  விரிவு அல்லது அகற்சிக்கே விசும்பு உவமையாக்கப்
பெறும்.                                                      122

4391. வீரனுக்கு இளையவன் விளங்கு சேவடி
பாரினில் சேறலின், பரிதி மைந்தனும்,
தாரினின் பொலங் கழல் தழங்க, தாரணித்
தேரினில் சென்றனன், சிவிகை பின் செல.

     வீரனுக்கு இளையவன் -இராமனுக்குத் தம்பியான இலக்குவனது;
விளங்கு சேவடி -
ஒளிவிடுகின்ற சிவந்த திருவடிகள்;பாரினில் சேறலின் -
நிலத்தில் நடந்து செல்லுவதனால்;பரிதி மைந்தனும் -சூரிய குமாரனான
சுக்கிரீவனும்;தாரினில் பொலன் கழல் தழங்க -கிண்கிணி மாலைகள்
போலக் காலில் கட்டிய வீரக் கழல்கள் ஒலிக்க;(தானும் காலால் நடந்து);
சிவிகை பின் செல-
பல்லக்கு தனக்குப் பின்னே வர;தாரணித் தேரினில்-
பூமியாகிய தேரின் மேல்;சென்றனன் -சென்றான் (தரையில் நடந்தான்).

     இலக்குவன் பாதம் வருந்தப் பூமியில் நடந்து  செல்லுதலால்,
சுக்கிரீவனும் சிவிகையேறிச் செல்லாமல் தரையில் நடந்து சென்றான் என்பது.
தார் - கிண்கிணிமாலை. இலக்குவனும், சுக்கிரீவனும் ஒரு பொற்
சிவிகையிலேறிச் சென்றதாக வான்மீகி கூறுவார்.                      123

4392. எய்தினன், மானவன் இருந்த
     மால் வரை,
நொய்தினின் - சேனை பின்பு
      ஒழிய, நோன் கழல்
ஐய வில் குமரனும்,
      தானும், அங்கதன்
கை துறந்து அயல் செல,
     காதல் முன் செல.

     நோன் கழல் -வலிய வீரக் கழலையும்;ஐய வில் குமரனும் -
அழகிய வில்லையும் உடைய இலக்குவனும்;தானும் -சுக்கிரீவனும்;சேனை
பின்பு ஒழிய -
(உடன் வந்த) வானர சேனைகள் பின்னே தங்கவும்;
அங்கதன் கைதுறந்து -
அங்கதன் பக்கத்தை விட்டு;அயல்