பக்கம் எண் :

494கிட்கிந்தா காண்டம்

 திருந்திழை திறத்தினால்,
      தெளிந்த சிந்தை நீ,
வருந்தினை இருக்க, யான்
      வாழ்வின் வைகினேன்.

     (பின்னும் இராமனை நோக்கிச் சுக்கிரீவன்);பெருந்திசை அனைத்
தையும் -
பெரிய திக்குகள் எல்லாவற்றையும்;பிசைந்து தேடினேன் -
துருவித் தேடிப் பார்த்து;தரும் தகை -சீதையைக் கொண்டுதரக் கூடிய
திறமை;அமைந்தும் -(என்னிடம்) இருந்தும்;அத் தன்மை செய்திலேன் -
அவ்வாறு செய்யாதவனாய்;திருந்து இழை திறத்தினால் -வேலைப்பாடு
மிக்க அணிகளை அணிந்தவளான சீதையின் பொருட்டு;தெளிந்த சிந்தை
நீ-
இயல்பாகவே கலக்கம் இல்லாமல் தெளிந்த மனமுடைய நீ;வருந்தினை
இருக்க -
வருந்தி இருக்கவும்;யான் -(அதைச் சிறிதும் எண்ணாமல்) நான்;
வாழ்வில் வைகினேன் -
இன்ப வாழ்க்கையில் காலங்கழித்தேன்.

     கலங்காத இராமனது மனம் கலங்கியிருக்க அதைத் தெளிவிக்கும்
வல்லமை தனக்கு இருந்தும் அதற்கேற்ற வழிமுறையும் தேடாது இன்ப
வாழ்வில் பொழுது போக்கியிருந்த தன் பேதைமையைச் சுக்கிரீவன் வெறுத்துக்
கூறுகின்றான் என்பது.  திருந்திழை - சீதை: அன்மொழித் தொகை.       131

4400.'இனையன யானுடை
      இயல்பும், எண்ணமும்,
நினைவும், என்றால், இனி,
      நின்று யான் செயும்
வினையும், நல் ஆண்மையும்,
      விளம்ப வேண்டுமோ? -
வனை கழல், வரி சிலை,
      வள்ளியோய்!' என்றான்.

     வனைகழல் -கட்டிய வீரக் கழலையும்;வரிசிலை வள்ளியோய் -
கட்டமைந்த வில்லையுமுடைய வள்ளலே!யான் உடை -என்னுடைய;
இயல்பும் எண்ணமும் -
தன்மையும் மனக்கருத்தும்;நினைவும் -
எண்ணங்களும்;இனையன என்றால் -இத் தன்மையனவாக இருந்தால்;இனி
யான் -
இனிமேல் நான்;நின்று செயும் -துணையாக இருந்து செய்யப்
போகின்ற;வினையும் நல்லாண்மையும் -செயலையும் சிறந்த வீரத்தையும்;
விளம்ப வேண்டுமோ -
சொல்லத் தகுமோ;என்றான் -(இராமனை
நோக்கிச் சுக்கிரீவன் மனம் வருந்திக்) கூறினான்.

     நீ மனத்தில் பெருந் துயரத்தோடு இருக்கவும் நானோ சீதையைத்
தேடித்தர வேண்டிய முயற்சி செய்யாமல் இன்ப நுகர்ச்சியில் இதுவரையில்
மனம் தோய்ந்திருந்தமையால், இனி அச் செயலை விரைந்து முடிப்பேனென்று
எனது செயலாண்மையைக்