| சூரியன் கான்முளை, 'தோன்றுமால், அவன் நா அரும் பரவையின் நெடிய சேனையான்.' |
ஆரியன் -இராமன்;பின்னரும் அமைந்து -மறுபடியும் சொல்லத் தொடங்கி (சுக்கிரீவனை நோக்கி);நன்கு உணர் மாருதி -(முக் காலத்தையும்) நன்றாக அறியவல்ல காற்றுக் கடவுளின் மகனான அனுமன்;எவ்வழி மருவினான் என -எங்கே இருக்கிறான் என்று கேட்க;(அதற்கு);சூரியன் கான்முளை -சூரியன் மகனான சுக்கிரீவன்;அவன் -அந்த அனுமன்;நீர் அரும் பரவையின் -நீர் நிரம்பிய அரிய கடல் போன்ற;நெடிய சேனையான் -பெருஞ் சேனையையுடையவனாய்;தோன்றும் -வந்து சேருவான். இராமன் அனுமனைக் குறித்தத் தனியே வினவியதால் அவனிடம் இராமன் வைத்துள்ள பேரருள் தோன்றும். பரவை பரந்திருத்தலின் கடலுக்குக் காரணக் குறியாயிற்று. 134 4403. | 'கோடி ஒர் ஆயிரம் குறித்த கோது இல் தூது ஓடின நெடு்ம் படை கொணர்தல் உற்றதால்; நாள் தரக் குறித்ததும், இன்று; நாளை, அவ் ஆடல் அம் தானையோடு அவனும் எய்துமால். |
கோடி ஓர் ஆயிரம் -ஓராயிரங் கோடியாக; குறித்த கோது இல் தூது-கணக்கிடப்பட்ட குற்றமற்ற தூதர்கள்;நெடும் படை -பெரிய வானரசேனைகளை;கொணர்தல் உற்றது ஓடின -திரட்டிக் கொண்டு வரும் பொருட்டு(ச் செய்தி செல்ல) விரைந்து சென்றுள்ளார்கள்;(இது வரை வானரப் படைகள் வராததால் அவற்றைத் திரட்டி வருவதற்கு அனுமன் காத்திருக்கிறான்);தரக் குறித்தது நாளும் உற்றது -(அவ்வாறு) கொண்டு வருவதற்குக் குறித்த நாளும் வந்து விட்டது;ஆல் -ஆதலால்;இன்று நாளை -இன்று அல்லது நாளை;அவ் ஆடல் அம் தானையோடு - வலிமையுள்ள அந்த வானர சேனையுடன்;அவனும் எய்தும் -அந்த அனுமனும் இங்கே வந்துவிடுவான் (என்றான்). ஆல் - இரண்டனுள் முன்னது 'ஆதலால்' என்பதன் விகாரம்; பின்னது ஈற்றசை. அடல் - வலி:இங்கே ஆடல் என நீண்டது. 135 4404. | 'ஒன்பதினாயிர கோடி உற்றது நின் பெருஞ் சேனை; அந் நெடிய சேனைக்கு நன்கு உறும் அவதி நாள் நாளை; நண்ணிய பின், செயத்தக்கது பேசற்பாற்று' என்றான். |
ஒன்பதின் ஆயிரம் கோடி -(இப்பொழுது என்னுடனே) ஒன்பதினாயிரங் கோடிக் கணக்கான;நின்பெருஞ் சேனை -உனது பெரிய வானர சேனை;உற்றது -வந்துள்ளது;அந் நெடிய சேனைக்கும் -(இனி வரவேண்டிய) அந்தப் பெரிய சேனைக்கு;நன்கு உறும் |