அவதி நாள் நாளை -ஒன்று திரண்டு வந்து சேர்வதற்குரிர நாளும் நாளைக்கே;நண்ணிய பின் -அந்தச் சேனையும் வந்த பிறகு;செயத் தக்கது-செய்யவேண்டியதைப் பற்றி;பேசற் பாற்று -பேசுவது தகுதி யுடையது;என்றான் -என்று கூறிமுடித்தான். வானர சேனையுடன் அனுமன் வந்த பிறகே செய்யத்தக்கதைப் பற்றிப் பேசவேண்டு மென்று சுக்கிரீவன் கருதினான் என்பது. தான் இராமனுக்கு அடியவன் என்ற எண்ணத்தால் சுக்கிரீவன் தன் சேனையை 'நின் பெருஞ் சேனை' என்றான். நெடியசேனை - துணைப்படை. 136 4405. | விரும்பிய இராமனும், 'வீர! நிற்கு அது ஓர் அரும் பொருள் ஆகுமோ? அமைதி நன்று' எனா, 'பெரும் பகல் இறந்தது; பெயர்தி; நின் படை பொருந்துழி வா' என, தொழுது போயினான். |
விரும்பிய இராமனும் -(சுக்கிரீவனிடம்) அன்புடைய இராமனும்; (அவனை நோக்கி);வீர -வீரனே!நிற்கு அது -உனக்கு (ச் சேனை திரட்டி முடித்தலாகிய) அச் செயலானது;ஓர் அரும்பொருள் ஆகுமோ -அரிய காரியமாகுமோ? அமைதி நன்று -(உனது) அடக்கமான குணம் சிறந்ததாக உள்ளது;எனா -என்று சொல்லி;பெரும்பகல் இறந்தது -(இப்பொழுது) நீண்ட பகலோ கழிந்துவிட் டது;பெயர்தி -(ஆகவே இன்று புறப்பட்டுச் சென்று;நின் படை -உனது சேனை;பொருந்துழி வா -திரண்டு வந்த போது (அவற்றோடு) வருவாய்;என - என்று இராமன் விடை கொடுக்க; தொழுது போயினான் -இராமனை வணங்கி (ச் சுக்கிரீவன்) சென்றான். சுக்கிரீவன் தன் சேனை தங்கியுள்ள பாசறைக்குச் சென்றான் என்பது. பெயர்தி: முற்றெச்சம். 137 அங்கதனையும் சுக்கிரீவனுடன் அனுப்பி இராமன், தம்பியுடன் வைகுதல் 4406. | அங்கதற்கு இனியன அருளி, 'ஐய! போய்த் தங்குதி உந்தையோடு என்று, தாமரைச் செங் கணான், தம்பியும், தானும் சிந்தையின் மங்கையும், அவ் வழி, அன்று வைகினான். |
தாமரைச் செங்கணான் - செந்தாமரை மலர்போன்ற சிவந்த கண்களையுடைய இராமன்;அங்கதற்கு இனியன அருளி -அங்கதனுக்கு |