இனிமையான சொற்களைக் கூறி;ஐய -ஐய;போய் உந்தையோடு தங்குதி -போய் உன் தந்தையாகிய சுக்கிரீவனோடு இருப்பாய்;என்று - என்று விடை தந்து அனுப்பி;தம்பியும் -இலக்குவனும்;சிந்தையின் மங்கையும் -(எப்பொழுதும்) தன் மனத்தே குடியிருக்கும் சீதையும்;தானும் - தானுமாக;அன்று அவ்வழி -அந்த இரவில் அவ் இடத்திலே;வைகினான் - தங்கியிருந்தான். இராமன் இடைவிடாது சீதையை நினைத்துக் கொண்டேயிருத்தலால் 'சிந்தையின் மங்கை' என்றார். 'தம்பியும் சிந்தையின் மங்கையும் தானும் வைகினான்' - தலைமை பற்றி வந்த பால் வழுவமைதி. 138 |