பக்கம் எண் :

500கிட்கிந்தா காண்டம்

கலித்துறை

4408.ஆனை ஆயிரம் ஆயிரத்து
      எறுழ் வலி அமைந்த
வானராதிபர் ஆயிரர் உடன்
      வர, வகுத்த
கூனல் மாக் குரங்கு
      ஐ - இரண்டு ஆயிர கோடித்
தானையோடும், - அச் சதவலி
      என்பவன் - சார்ந்தான்.

     அச்சதவலி என்பவன் -அந்தச் சதவலி என்னும் வானர வீரன்;
ஆயிரம் ஆயிரத்து ஆனை -
பத்து இலட்சம் யானைகளின்;எறுழ்வலி
அமைந்த -
மிக்க வன்மையோடு பொருந்திய;வானர அதிபர் ஆயிரர் -
வானர சேனைத் தலைவர் ஆயிரம் பேர்;உடன்வர -தன்னைப்
பின்தொடர்ந்து வர;வகுத்த - அணிவகுக்கப்பட்ட;கூனல் மா -முதுகு
கூனியுள்ள பெரிய;ஐ இரண்டு ஆயிர கோடி -பதினாயிரம் கோடி;
குரங்குத் தானையோடு -
வானர சேனையோடு;சார்ந்தான் -சுக்கிரீவனிடம்
வந்தான்.

     எறுழ் வலி: ஒரு பொருட் பன்மொழி. சதவலி: முகத்தில் நூறு மடிப்பு
களையுடையவன்.  வான்மீகத்தில் இப்பெயர் 'சதபலி' என்று காணப்படுகிறது.
                                                           2

4409. ஊன்றி மேருவை எடுக்குறும்
      மிடுக்கினுக்கு உரிய
தேன் தெரிந்து உண்டு
      தெளிவுறு வானரச் சேனை,
ஆன்ற பத்து நூறு
      ஆயிர கோடியோடு அமையத்
தோன்றினான், வந்து -
      சுசேடணன் எனும் பெயர்த் தோன்றல்.

     சுசேடணன் எனும் பெயர் தோன்றல் -சுசேடணன் என்னும்
பெயரையுடைய வானர வீரன்;மேருவை ஊன்றி எடுக்குறும் -மேரு
மலையையும் பேர்த்து எடுக்கவல்ல;மிடுக்கினுக்கு உரிய -வலிமையு
டையதும்;தேன் தெரிந்து உண்டு -மதுவை ஆராய்ந்து பருகி;தெளிவுறு -
மயக்கமின்றித் தெளிவு பெற்றனவுமான;ஆன்ற வானர சேனை பத்து நூறு
ஆயிர கோடியோடு -
சிறந்த பத்து இலட்சங் கோடி வானர சேனையோடு;
அமைய வந்து தோன்றினான் -
பொருந்த வந்து சேர்ந்தான்.

     மேருவையும் பேர்த்து எடுக்கக் கூடிய வல்லமையமைந்த பத்து இலட்சங்
கோடி வானர சேனையோடு சுசேடணன் வந்து சேர்ந்தான் என்பது.
சுசேடணன்: