பக்கம் எண் :

தானை காண் படலம் 501

இவன் வாலியின் மனைவியான தாரைக்குத் தந்தை: வருணதேவன் மைந்தன்
என்றும் கூறுவர்.  தோன்றல்: நல்ல தோற்றமுடையவன் என்று
காரணக்குறியாம்.                                              3

4410. ஈறு இல் வேலையை
      இமைப்புறும் அளவினில் கலக்கிச்
சேறு காண்குறும் திறல்
      கெழு வானரச் சேனை
ஆறு - எண் ஆயிர கோடியது  உடன்
      வர, - அமிழ்தம்
மாறு இலா மொழி உருமையைப்,
      பயந்தவன் - வந்தான்.

     அமிழ்தம் மாறு இலாமொழி -தேவ அமிழ்தமும் இணையாகாத
(இனிய) சொற்களையுடைய;உருமையைப் பயந்தவன் -சுக்கிரீவன்
மனைவியான உருமையைப் பெற்ற தந்தை;ஈறு இல் வேலையை -முடிவு
காணப்படாத கடலையும்;இமைப்புறம் அளவினில் -கண் இமைக்கும்
நேரத்தில்;கலக்கிச் சேறு காண்குறும் -கலக்கிச் சேறாக்க வல்ல;திறல்
கெழு -
வலிமை நிறைந்த;வானர சேனை ஆறு எண் ஆயிர கோடியது -
நாற்பத்தெட்டாயிரங் கோடி வானர சேனை;உடன் வர -தன்னைத்
தொடர்ந்து வர;வந்தான் -வந்து சேர்ந்தான்.

     உருமையின் தந்தை தாரன் என்பவன்; இவன் தேவகுருவாகிய
பிரகஸ்பதியின் மைந்தன்.  இத் தாரன் கடலையும் கலக்கிச் சேறாக்க வல்ல
நாற்பத்தெட்டாயிரங் கோடி வானர சேனையோடு வந்தான் என்பது.

     கோடியது: (கோடி + அது) - அது பகுதிப் பொருள் விகுதி.         4

4411.ஐம்பது ஆய நூறாயிர
      கோடி எண் அமைந்த,
மொய்ம்பு மால் வரை புரை
      நெடு வானரம் மொய்ப்ப, -
இம்பர் ஞாலத்தும் வானத்தும்
      எழுதிய சீர்த்தி
நம்பனைத் தந்த கேசரி -
      கடல் என நடந்தான்.

     இம்பர் ஞாலத்தும் -இந்த உலகத்திலும்;வானத்தும் -விண்ணுலகத் திலும்;எழுதிய சீர்த்தி -பொறித்த பெரும்புகழையுடைய;நம்பனைத்
தந்த -
சிறந்தவனான அனுமனைப் பெற்ற;கேசரி -கேசரி என்னும் வானர
வீரன்;ஐம்பது ஆய நூறாயிரம் கோடி எண் அமைந்த -ஐம்பது இலட்சங்
கோடி என்று கணக்கிடப் பெற்ற;மால் வரை புரை -கைலை மைையைப்
போன்ற;மொய்ம்பு நெடு வானரம் -